இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் ரஜினி. ரஜினியின் பிறந்தநாள் நாளை வரும் நிலையில், அதை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு தலைப்புடன் சேர்த்து படக்குழு சார்பில் ரஜினியின் பிறந்தநாள் டீசர் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.