Advertisment

புதிய படத்தை பூஜையுடன் தொடங்கினார் 'பாகுபலி' எஸ்.எஸ்.ராஜமௌலி!

RRR

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

1500 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற 'பாகுபலி' படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படம் எப்போது, யாருடன் என ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது தன்னுடைய அடுத்த படத்தை தொடங்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்க, இப்படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு ராஜமெளலி, ராமா ராவ், ராம் சரண் என மூவரின் பெயருமே ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவதால், 'ஆர்ஆர்ஆர்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் நேற்று தொடங்கியது. மேலும் பூஜையில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டு, கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். மேலும், ‘பாகுபலி’ நாயகர்கள் பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

s.s.rajamouli ss rajamouli RRR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe