பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து உருவாகும் இந்த பிரம்மாண்ட படத்தின் கதை களம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜு ஆகிய இரு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தது என்று படக்குழு அறிவித்தது.

Advertisment

khgh

சுமார் 350 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பாட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது இந்த வருட ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் பணிகள் விரைவில் முடிவதாக இல்லை என்பதால் அடுத்த வருட சங்கராந்தியை குறி வைத்து தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடபட்டுள்ளது.

Advertisment

தற்போது கோரோனா வைரஸ் பரவலால் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் விஜய்யை நடிக்க வைக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் நடித்தால் தமிழ், மலையாளத்தில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ராஜமௌலி கருதுவதாகவும், இதற்காக அவர் விஜய்யை அணுகி பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.