irumbu thirai.jpeg

Advertisment

keerthy suresh

வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள 'மகாநதி' தெலுங்கு திரைப்படம் நேற்று வெளியானது. மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார். நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.

அதில்,"சாவித்திரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை பார்த்திராத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் பழம்பெரும் நடிகையை மீண்டும் உயிர்பெற்று வர வைத்துள்ளார். துல்கர் சல்மான் அற்புதமாக நடித்துள்ளார். நான் அவரது ரசிகனாகிவிட்டேன். வாழ்த்துக்கள் நாக் அஸ்வின், ஸ்வப்னா, உங்களது நம்பிக்கை மற்றும் உறுதி தலைசிறந்தது" என்றார். இப்படம் தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் வருகிற 11ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.