Skip to main content

ஆபாசப் பட வழக்கில் பிரபல நடிகையின் கணவர் கைது!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021
hdhdhdhd

 

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவை ஆபாசப் படங்கள் தயாரித்த வழக்கில் மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். ராஜ் குந்த்ரா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது ஐபிசி பிரிவுகள் 420 (மோசடி), 34 (பொது நோக்கம்), 292 மற்றும் 293 (ஆபாசமான மற்றும் அநாகரீகமான விளம்பரங்கள் மற்றும் காட்சிகள் வெளியிட்டது), மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பெண்களின் அநாகரிக பிரதிநிதித்துவம் (தடை) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

 

"கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஒருவர் மூலம் மும்பையில் சிலர் ஆபாசப் படங்களை உருவாக்கி, அதனை செயலிகள் மூலம் வெளியிடுவதாகக் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது இந்த குற்றத்தில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதில் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இது தொடர்பாக எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷில்பா ஷெட்டியின் ரூ.97.79 கோடி சொத்துகள் முடக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
shilpa shetty ed fraud case update

2017ஆம் ஆண்டு பிட் காயின் மூலம் 6,600 கோடி மோசடி செய்ததாக வேரியபிள் டெக் நிறுவனம் மீது டெல்லி போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிறுவனத்தை அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகேந்தர் பரத்வாஜ் மற்றும் மறைந்த அமித் பரத்வாஜ் ஆகியோர் நடத்தி வந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவுசெயப்பட்டது. இதையடுத்து இந்த விவாகாரத்தில் அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு இந்த மோசயில் தொடர்பு இருப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்தன. மறைந்த அமித் பரத்வாஜிடமிருந்து, ரூ.150 கோடிக்கும் மேல் ராஜ் குந்த்ரா பெற்றதாக தெரிய வந்தது. அதனடிப்படையில் ராஜ் குந்த்ராவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.   

shilpa shetty ed fraud case update

இந்த நிலையில் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ரூ. 97.79 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஒரு பங்களா, ராஜ் குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள், ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜூஹுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஷில்பா ஷெட்டி புகார் எதிரொலி - சிக்கிய 2 பேர்

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

Robbery at Shilpa Shetty house

 

இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் ஷில்பா ஷெட்டி தற்போது 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். ரோஹித் ஷெட்டி மற்றும் சுஷ்வந்த் பிரகாஷ் இயக்கி வரும் இந்த சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் சுகீ என்ற இந்தி படத்தில் நடித்துள்ள நிலையில் கன்னடத்திலும் ஒரு படம் நடிக்கிறார். 

 

நடிப்பதில் பிசியாக இருக்கும் ஷில்பா ஷெட்டி கடந்த 8 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இத்தாலி சென்ற அவர் இன்னும் தனது குடும்பத்துடன் அங்கு இருக்கிறார். இதனிடையே கடந்த வாரம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

 

இந்நிலையில் அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் 2 பேருக்கு அந்த திருட்டில் தொடர்புள்ளதை அறிந்து அவர்களை இன்று கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.