Skip to main content

“விஜய் கட்டிய கோயிலுக்கு எல்லோரும் செல்ல வேண்டும்” - காரணம் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
raghava lawrence visit vijay sai baba temple with vijay mother shoba

விஜய்யின் அரசியல் கட்சியான த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய் சாய் பாபா கோயிலில் இருக்கும் புகைப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் கடந்த 8ஆம் தேதி பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் பல்வேறு கேள்விகளையும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது. பின்பு புஸ்ஸி ஆனந்த் திடீரென்று அப்புகைப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்திலிருந்து நீக்கினார். இது சர்ச்சையைக் கிளப்ப அப்புகைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தது. கொரட்டூரில் விஜய்க்கு சொந்தமான 8 கிரவுண்ட் நிலத்தில் அவருடைய தாயார் ஷோபாவிற்காக 'சாய்பாபா மந்திர்' என்று ஒரு கோயில் கட்டி உள்ளதாகவும், விஜய்க்கு சொந்தமாக சாலிகிராமத்தில் இருக்கும் ஷோபா திருமண மண்டபம் உள்ள இடத்தில் முதலில் கோவில் கட்ட ஏற்பாடு செய்து, அங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் அந்த முடிவு மாற்றப்பட்டு கொரட்டூரில் கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே சாய்பாபா கோவில் ஒன்றுக்கு நடிகர் விஜயின் தாய் ஷோபனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கும்பாபிஷேகம் செய்து வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியிருந்தது. இதையடுத்து இந்த கோயில் சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில் சோபா செய்தியாளர்களிடம் பேசினார்.  சாய்பாபா கோவில் தரிசனம் மேற்கொண்ட ஷோபா, ரொம்ப நாளாக விஜய்யின் சொந்த இடத்தில் ஒரு சாய்பாபா கோயில் கட்ட ஆசையாக இருப்பதாக விஜய்யிடம் சொல்லிவந்ததாகவும், அதன்படி அவர் கட்டிக்கொடுத்துவிட்டதால் வியாழன் தோறும் அந்த கோயிலுக்கு வந்து தரிசனம் மேற்கொண்டு வருவதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார். 

இந்த நிலையில் விஜய் கட்டியுள்ள சாய் பாபா கோயிலில் ராகவா லாரன்ஸ் விஜய்யின் தாயார் ஷோபாவுடன் சென்று தரிசனம் செய்தார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டதாவது, “இன்று நண்பன் விஜய்யின் சாய்பாபா கோவிலுக்கு அவரது தாயார் ஷோபாவுடன் சென்றேன். நான் என் ராகவேந்திரர் ஸ்வாமி கோவிலைக் கட்டியபோது, எங்கள் கோவிலில் ஒரு பாடலைப் பாடி, எங்களுக்கு ஆசீர்வதித்தார். இன்று அவருடன் அவர்களின் கோவிலுக்கு சென்றதில் மகிழ்ச்சியடைகிறேன். நண்பன் விஜய்க்கு இந்தக் கோவிலைக் கட்டியதற்காக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நான் இங்கு தெய்வீகத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலை உணர்ந்தேன். அதனால் எல்லோரும் இந்த கோவிலுக்கு வந்து அருள் பெற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ராகவா லாரன்ஸ் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். இப்போது விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். 

Hi everyone, I visited Nanban Vijay’s Sai Baba Temple today along with his mother. When I built My Raghavendra Swamy temple, She sang a song in our temple and graced us with her presence. Today, I’m happy to visit their temple with her. My heartfelt wishes to Nanban Vijay… pic.twitter.com/sZvzFqC0LL

 

— Raghava Lawrence (@offl_Lawrence) April 13, 2024

சார்ந்த செய்திகள்