கரோனாவால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பாதிப்பில்லாத பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இருந்தும் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸின் டிரஸ்டை சேர்ந்த 18 குழந்தைகள் மற்றும் 3 ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் உடனடி சிகிச்சைக்காக சென்னை லயோலா கல்லூரியில் உள்ள முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் தற்போது அனுமதிக்கப்பட்ட 21 நோயாளிகளின் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் காய்ச்சல் அளவு குறைந்து வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.