Skip to main content

''மது குடிப்பவர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்'' - ராகவா லாரன்ஸ் 

Published on 20/05/2020 | Edited on 20/05/2020
bzd

 

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அரசுக்கும், மக்களுக்கும் மற்றும் திரையுலகினருக்கும் நிதியுதவி அளித்து வருகிறார். இதற்கிடையே 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் திறக்கப்பட்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் மதுகுடிப்பவர்கள் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... 

 

''நண்பர்களே, ரசிகர்களே, தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. டாஸ்மாக் வெளியே குவிந்த மக்களைப் பார்த்த பிறகு, என்னுடன் சேவை செய்து வரும் என் அம்மாவும், இன்னும் சிலரும் என்னிடம் கேள்வி கேட்டனர். 'நாம் கடுமையாக உழைத்து மற்றவர்களுக்கு உதவுகிறோம். ஆனால் இவர்கள் எவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமா..?' என்று கேட்டனர். என் அம்மா, நண்பர்கள் மட்டுமல்ல, நாம் சரியானவர்களுக்குத்தான் சேவை செய்கிறோமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதனால் நான் இதை அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

 

குடும்பத்தில் ஒருவர் குடிக்கிறார் என்பதற்காக நாம் சேவையை நிறுத்தினால் அந்த நபரின் அம்மா, மனைவி, குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள். பல குடும்பங்களுக்கு வீடே இல்லை. குடிப்பவர்களைத்தான் நாம் செய்திகளில் பார்க்கிறோம். ஆனால் நிறைய ஆண்கள் குடிக்காமல் தனது குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்யக் கஷ்டப்படுகின்றனர். அதனால் தயவுசெய்து உதவுவதை நிறுத்தாதீர்கள். மது குடிப்பவர்கள் அனைவருக்கும் என் சிறிய வேண்டுகோள். குடிப்பதற்கு முன் பசியால் வாடும் உங்கள் குழந்தையின் கண்ணீரை நினைத்துப் பாருங்கள். நேர்மறை சிந்தனையைப் பரப்புவோம். சேவையே கடவுள்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள்” -  ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
raghava lawrence request to give  chance to handihapped childrens

ராகவா லாரன்ஸ் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார்.  மேலும் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்ததாக வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் படத்தில் நடிக்கவுள்ளார். 

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே நிறைய மக்களுக்கு நிதி, கல்வி எனப் பல்வேறு உதவிகளை லாரன்ஸ் வழங்கி வருகிறார். இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ராகவா லாரன்ஸின்  ‘கை கொடுக்கும் கை’ மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில்,  ‘மல்லர் கம்பம்’ சாகச நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகவா லாரன்ஸ், “என்னுடைய படங்களில் அதிகபட்சம் மாற்றுத் திறனாளி பசங்களை ஆடவைக்க முயற்சி செய்வேன். அவுங்களுக்கு நடனத்தை விட்டால் வேறு எதுவும் தெரியாது. வாழ்வாதாரமே நடனத்தில் தான் அடங்கியிருக்கு. ஆனால் கை கால்கள் இல்லை என்றாலும் கூட அவர்களின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கே சில சமயங்களில் மன அழுத்தத்தில் இருக்கும் போது பசங்கள கூப்பிட்டு 5 நிமிஷம் ஆடசொல்லி பார்ப்பேன். இவுங்களே இவ்ளோ சாதிக்குறாங்க. இதுக்கெல்லாம் அப்செட் ஆனா எப்பிடி-னு ரீசார்ச் பண்ணிப்பேன்.

சமீப காலமாக பசங்களுக்கு வாய்ப்பு கிடைக்காம இருந்தாங்க. நான் நடிக்கிற எல்லா படத்திலும் மாற்றுத் திறனாளி பசங்களை பயன்படுத்தலாம் எனச் சொல்லி தயாரிப்பாளரிடம் கேட்பேன். எல்லா இடத்திலும் அவுங்களையே ஆட வைச்சா ரிப்பீட் ஆகிற மாதிரி இருக்கு மாஸ்டர்னு சொல்வாங்க. எத்தனையோ தடவை நயன்தாரா, த்ரிஷா ஆடியதையெல்லாம் பார்க்கிறோம்ல சார், இந்தப் பசங்களையும் பார்ப்போம் எனச் சொல்வேன். இதற்கு ஒரு சிலர் ஒத்துப்பாங்க, ஒரு சிலர் வேண்டாம்னு சொல்லிவிடுவாங்க. வாழ்க்கையில் தன்னம்பிக்கை இல்லாமல் எவ்ளோ விஷயங்கள் நடக்குது. அது தற்கொலை வரை போகிறது. ஆனால் இந்தப் பசங்களைப் பார்த்து தற்கொலை செய்யும் எண்ணம் வரவங்க கத்துக்க வேண்டும்” என்றார். 

Next Story

அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகள் - பிஸியாகும் ராகவா லாரன்ஸ்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
raghava lawrence next with lokesh kanagaraj benz, ar murugados asoosociate venkat mohan in hunter

ராகவா லாரன்ஸ் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். படங்களில் நடித்துக் கொண்டே நிறைய ஏழை எளிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனிடையே விஜய் கட்டிய கோயிலுக்கு விஜய்யின் தாயார் ஷோபாவுடன் அண்மையில் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.  

raghava lawrence next with lokesh kanagaraj benz, ar murugados asoosociate venkat mohan in hunter

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. முதலில் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும் வெளியிடவும் செய்கிறார். 

இப்படத்திற்குப் பின் அடுத்த படமாக, சத்ய ஜோதி மற்றும் கோல்டு மைன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் ஹண்டர் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையாக இப்படம் வெளியாகவுள்ளது.