Skip to main content

இந்தியாவை உலுக்கிய உண்மை சம்பவம் ; வெப் சீரிஸாக எடுக்கும் ராதிகா

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

 Radhika takes web series about true incident

 

தமிழ் சினிமாவில் தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதிலும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் தொடர்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அந்தவகையில் இந்தியாவை உலுக்கிய சம்பவம் ஒன்றை வெப் சீரிஸாக ராதிகா எடுக்கவுள்ளார்.  

 

வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மறைந்த நடிகர் எம்.ஆர் ராதா. அப்போது முன்னணி நடிகராக இருந்து மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் எம்.ஆர் ராதா அவர்களுக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக எம்.ஜி.ஆரை அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் எம்.ஆர் ராதா சுட்டார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. பின்பு எம்.ஆர் ராதா அவர்கள் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கு வருடம் சிறைத் தண்டனை அனுபவித்தார். 

 

இந்நிலையில் எம்.ஆர் ராதாவின் மகளான ராதிகா இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், " என் தந்தை எம்.ஆர்.ராதா சர்ச்சைக்குரிய மனிதர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நாட்களில் எம்.ஜி.ஆர்-க்கும், எனது தந்தைக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அனைவருக்கும் தெரியும். அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க இருக்கிறேன். இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்'' என குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Opposition candidates shared congratulations

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனுவை சென்னை அடையாறில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுலரிடம் தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் ஜெயவர்தன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று (25.03.2024) தாக்கல் செய்தனர்.

இத்தகைய சூழலில் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டு இருந்தார். அதே போன்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்த பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தமிழச்சி தங்கபாண்டியன் அங்கே இருந்த தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்த உடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒருவருக்கு ஒருவர் கை குழுக்கி கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Opposition candidates shared congratulations

இதே போன்று விருதுநகரில் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வந்த தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரனும், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் கை குழுக்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

Opposition candidates shared congratulations

மேலும் நாமக்கல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழ் மணியும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் கேபி. ராமலிங்கமும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணியும் கே.பி. ராமலிங்கத்திடம் கை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அதே போன்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், தி.மு.க. கூட்ட்ணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் நாவாஸ் கனியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் கைகளை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

Next Story

நடிகை ராதிகாவை பராசக்தி மாரியம்மனோடு ஒப்பிடுவதா? - பா.ஜ.க. நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Opposition to BJP executive who compared actress Radhika with Parasakthi Mariamman

பா.ஜ.க. சார்பில் விருதுநகரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், வேட்பாளர் ராதிகா, அவருடைய கணவர் சரத்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தில் பேசிய விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பாண்டுரங்கன், “ராதிகா சரத்குமார் நல்லவர். மங்கலகரமானவர். விருதுநகர் பராசக்தி மாரியம்மனே வேட்பாளராக நமக்குக் கிடைத்திருக்கிறார்.” என்று உணர்ச்சிவசப்பட, பாஜக தொண்டர்கள் மெய்சிலிர்த்தனர். விருதுநகரில் தற்போது  பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா  துவங்கியிருக்கிறது.

ஏராளமான பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர். ஆன்மீகப் பரவசம் பெருக்கெடுத்து ஓடும் இத்தருணத்தில் நடிகை ராதிகாவை, விருதுநகர் பராசக்தி மாரியம்மனுடன் ஒப்பிட்டுப் பேசியதை விருதுநகர் மக்கள் ரசிக்கவில்லை. ‘பக்தியைப் பரப்புவது போல் கோஷமிடுகிறார்கள். ஆனால், நடிகை ராதிகாவை பராசக்தி மாரியம்மனாகப் பார்க்கிறார்கள். இது முரண்பாடு அல்லவா?’ என நம்மிடம் கேள்வி எழுப்பினார் உள்ளூர் அம்மன் பக்தரான ஆறுமுகசாமி.