Skip to main content

"பெண்களுக்கு சம உரிமை கொடுங்கள்" - கபாலி பட நடிகை ஆதங்கம்

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

radhika apte says We live in a country where there is a lot of patriarchy

 

2012ல் பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த 'தோனி' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், ரஜினியின் கபாலி படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே கார்த்தியின் 'அழகுராஜா', 'சித்திரம் பேசுதடி 2' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது இந்தியில் அவர் புதிதாக நடித்துள்ள படம் 'மிஸ் அண்டர்கவர்' (Mrs Undercover). துர்கா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள இப்படம் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

 

அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராதிகா ஆப்தே, சினிமாவில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஆணாதிக்கம் அதிகம் உள்ள ஒரு நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். பல பெண்கள் தங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க இரவு பகலாக உழைக்கிறார்கள். ஆனால் இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள். அது போன்று ஒரு கதாபாத்திரம் தான் துர்கா" என்றார். 

 

மேலும், "இப்போது உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அதாவது சம உரிமை, சம ஊதியம், சமமான வேலை வாய்ப்புகள், சமமான அங்கீகாரம் ஆகியவற்றுக்காக அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். திரைத்துறை, சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிப்பதாகவே இருந்து வருகிறது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“குடிக்க தண்ணீரும் இல்லை, கழிவறையும் இல்லை” - மாட்டிக் கொண்ட நடிகை

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
radika Apte Locked In Airport For Hours

2012ல் பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த 'தோனி' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், ரஜினியின் கபாலி படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே கார்த்தியின் 'அழகுராஜா', 'சித்திரம் பேசுதடி 2' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள மெரி கிறுஸ்துமஸ் படத்திலும் நடித்துள்ளார்.

ad

இந்த நிலையில் ராதிகா ஆப்தே, விமான நிலையம் ஒன்றில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலை தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், “இன்று காலை 8.30 மணிக்கு எனக்கு விமானம். இப்போது மணி 10.50. இன்னும் விமானம் ஏறவில்லை. ஆனால், விமானம் ஏறப்போவதாக கூறி, அனைத்து பயணிகளையும் ஏரோ பிரிட்ஜில் வைத்து பூட்டி விட்டனர். அதில் சிறிய குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகளும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடைக்கப்பட்டனர். பாதுகாவலர்கள் கதவை திறக்கவில்லை. அதிகாரிகளுக்கும் எதுவும் தெரியவில்லை. உள்ளே குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லை. வேடிக்கையான இந்தப் பயணத்துக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

radhika apte in vijay sethupathu merry chiristmas movie

 

தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, இந்தியில் 'மும்பைக்கார்' மற்றும் 'ஜவான்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். மேலும் மௌன படமான 'காந்தி டாக்கீஸ்' படத்திலும் நடிக்கிறார். தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுக குமார் இயக்கும் புது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

 

இதனிடையே பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் பணியாற்றுவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகை ராதிகா அப்தே இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் இந்தாண்டு டிசம்பரில் வெளியாகவுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.