rhsh

Advertisment

பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராதிகா. அதன் பின்னர் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் அதன் பிறகு சின்னத்திரையில் கால் பதித்து இன்று வரை கோலோச்சி வருகிறார். இந்நிலையில் அவர் திரையுலகிற்கு அறிமுகமாகி நேற்றோடு 42 ஆண்டுகள் ஆகின்றன. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் ராதிகாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

"நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, நான் தினமும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, எனது சிறந்ததைக் கொடுத்து, என் வேலையை வளர்த்துக் கொண்டேன். அதுதான்இந்தப் பயணத்தை எனக்குக் கொடுத்தது. இது பலருக்கும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்தது. மேலும் எனக்கு அன்பும் பலமும் தந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார்.