Skip to main content

பாலச்சந்தரிடம் அப்படிக் கேட்ட ஒரே ஆள் ராதாரவிதான்! - கரு.பழனியப்பன் உடைத்த உண்மை   

Published on 04/08/2018 | Edited on 04/08/2018

நேற்று இயக்குனர் மஞ்சுநாத்தின் 'பொறுக்கீஸ் அல்ல நாங்கள்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் கரு.பழனியப்பன் ராதாரவி உடனான தன் நட்பு குறித்து விவரித்தார்.

 

karu palaniyappan



"ராதாரவி சார் எப்பவும் என் மரியாதைக்கு உரியவர். நான் படம் பண்ணும் போது அவர் முழுக்க சங்கச் செயல்பாடுகளில் இருந்தார், அந்த நேரத்தில் எப்போதாவது தொலைபேசியில் கூப்பிடுவார். நான் எப்பவும் படப்பிடிப்பு நேரங்களில் தொலைபேசியை கையில் வச்சிருக்க மாட்டேன். சாப்பிடும் போதுதான் எடுத்துப் பார்ப்பேன். அதுல விடுபட்ட அழைப்பில் அவர் அழைப்பு இருக்கும். அப்பறம் நான் கூப்பிடுவேன்.  நம்ம படத்துல ஏதோ ஒரு கம்பேனி ஆர்ட்டிஸ்ட் ஒரு நாலு நாள் நடிச்சிட்டு போயிருப்பாங்க. அவர்கள் பற்றி சார்கிட்ட  ஒரு புகார் வந்திருக்கும். என் படத்தில் ஒன்னும் இருக்காது, ஆனாலும் ராதா ரவி சார், 'உன் படத்தில் நடிக்கிறாரே ஒரு ஆர்ட்டிஸ்ட் அவர் எப்படி? ஒழுங்கா ஷூட்டிங்க்கு வந்தாரா? சொன்ன தேதிக்கு ஒழுங்கா வந்தாரா?' அப்படினு கேட்பாரு. 'இல்ல சார் நம்ம படத்துல எந்த பிரச்சனையும் இல்லை, ஏன் சார்னு' கேட்டா 'இல்லப்பா அவர் மேல ஒரு கம்ப்ளைண்ட் வந்துச்சு, அதான் மற்ற இடத்தில் எல்லாம் எப்படி இருந்தார்னு தெரிஞ்சிக்கணும் இல்லையா, கம்ப்ளைண்ட் கொடுத்தவங்களை மட்டும் கேட்கக் கூடாதுல' அப்டின்னுவாரு. அதுதான் உயர்ந்த பண்பு. அப்படித்தான் எனக்கு ராதாரவி சார் கூட பழக்கம் ஏற்பட்டுச்சு.

 

 


திரை உலகத்தில் நாம் எல்லோரையும் எதிர்த்துப் பேசுவோம், ஆனா நம்மை அறிமுகம் செய்தவரை மட்டும் எதிர்த்துப் பேச மாட்டோம். அவர் மேல மரியாதை இருக்கோ இல்லையோ, சபைக்கு அவர் வரும்போது ஒரு பொய் நடிப்பு நடிப்போம். எனக்குத் தெரிஞ்சு இயக்குனர் திரு.பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, ராதாரவி ஒருத்தர்தான் பாலச்சந்தரை எதிர்த்து 'ஏன் நீங்க என்னை கூப்பிடவே மாட்டேங்கிறீங்க? ஏன் நீங்க 'நான்தான் இவனை அறிமுகப்படுத்தினேன்னு சொல்லமாட்டேன்றீங்க? உங்களுக்கு என்ன நான் அவளோ மட்டமா போனவனா?' சண்டை போட்ட ஒரே ஆள் எனக்கு தெரிஞ்சு இவர் மட்டும்தான். ராதாரவி சார் சினிமாவில் கம்மியான படங்கள் செய்ததற்கு காரணமும் அதுதான். வெளிப்படையாகப் பேசிவிடுவார், அவரை எப்படி படத்தில் நடிக்க அழைப்பார்கள்".  




 

சார்ந்த செய்திகள்

Next Story

“வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் திமுக அரசு” - கரு.பழனியப்பன்

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

karu pazhaniyappan talk dmk govt

 

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வாழ்த்தரங்க நிகழ்வு நடைபெற்றது. கழக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. அராசா, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், பெரியாரிய சிந்தனையாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் சுகிர்தராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

இந்நிகழ்வில் பேசிய மதிமாறன், “திமுக மாணவர் அணிக்கு என்று தனி சிறப்பு உள்ளது. இந்தித்திணிப்பை எதிர்ப்பவர்கள் இந்திக்காரர்களுக்கு எதிராக உள்ளோம் என்கிறார்கள். பாஜக கட்சியை எதிர்க்கும் கட்சிகள் 100 உள்ளன. தமிழ்நாடு முதல்வர் பிரதமராக வந்துவிடுவார்கள் என்கிறார்கள். அவர் வரட்டும். ஹிட்லரை வீழ்த்திய ரஷ்யாவின் ஸ்டாலின் போல், பாஜக ஆட்சியை திராவிட மாடல் கொண்டு வீழ்த்துவார் நம் தமிழ்நாடு முதல்வர். அதிமுக, திமுக எதிர்ப்பாளர்கள் அல்ல, அவர்கள் ஒரு கோமாளிகள். அன்று எமர்ஜென்ஸி இல்லாது இருந்திருந்தால் திமுக ஆட்சி காலம் காலமாக இருந்திருக்கும். ஸ்டாலின் கதையை முடிப்பேன் என்ற பன்வாரிலால், இன்று அவர் ஆட்சி வந்த பிறகு மிகச்சிறந்த ஆட்சி திமுக ஆட்சி தான் என்கிறார். காலை உணவு திட்டம் மிகவும் அருமையானது. இன்னும் 5 ஆண்டுகளில் மாணவர்கள் நன்றாக இருப்பார்கள்” எனப் பேசினார்.

 

இதையடுத்து பேசிய கரு.பழனியப்பன், “மற்ற கட்சிகள் எது பேசினாலும் திமுக பதில் சொல்லும். ஆனால், திமுக கேள்வி கேட்டால் மற்ற கட்சிகளுக்கு பதில் சொல்லத் தெரியாது. அண்ணாமலையைக் கேட்டால் கலைஞர் என்று சொல்லுகிறார். எந்தக் கட்சியை எதிர்க்கிறதோ அந்த கட்சியின் தலைவரையே தங்கள் கட்சித் தலைவர் என்று கூறுகிறது பாஜக. ஸ்டாலின் ஹீரோ ஆனது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவி ஏற்ற நேரம். 20 நாட்களில் கொரோனா நோயாளிகளைச் சென்று நேரில் பார்த்தது தான் அவர் சூப்பர் ஹீரோ ஆன நேரம். ஆளுநர் ரவியை சட்டசபையை விட்டு ஓட வைத்தது தான் அவர் மாஸ் ஹீரோ ஆன நாள். கல்லூரிகளில் மாணவர் தேர்தல் வைக்க வேண்டும்.

 

பண்பாடு, இலக்கியம், மருத்துவம், கீழடியில் அருமையான ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது திராவிட மாடல் ஆட்சிக்கான சான்று. மகாபாரதத்தை நம்புகிறவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யாமல் உள்ளனர். அண்ணாவிற்கு பிறகு கலைஞருக்கு மதுரையில் நூலகம் கட்டுகிறார். கலைஞர் நடமாடும் நூலகத்தை உதயநிதி அமைக்க உள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்துவது தான் இந்த திமுக அரசு. ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து பேசினார். அதற்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. அவர் அதில் வெற்றி பெற்றதன் மூலம் பதில் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்த போதும், தற்போது முதல்வராக இருந்த போதும் ஒரு நாளும் ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசியது இல்லை. சட்டமன்றம் கட்ட மிக அருமையான இடம் உள்ளது” என்றார்.

 

 

Next Story

"அ.தி.மு.க காலகாலத்துக்கும் பா.ஜ.கவின் அடிமைதான்... தேர்தலுக்காக இந்த நாடகம்" - கரு.பழனியப்பன் பொளேர்

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

dfgj

 

தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த உள்ளாட்சி தேரதல் பிரச்சாரம் நேற்று மாலையோடு நிறைவடைந்தது. அரசியல் கட்சியினர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், சில இடங்களில் வேட்பாளர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்கள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்த சம்பவங்களும், அதன் காரணமாக அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது. இது ஒருபுறம் இருக்க மாவட்டங்களில் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். பல முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து தங்கள் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.

 

அந்த வகையில் திமுகவை ஆதரித்து கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் திரைப்பட இயங்குநர் கரு.பழனியப்பன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, " கடந்த 8 மாத திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும். நிர்வாகம் தெரிந்த காரணத்தால் தான் கரோனாவில் இருந்து முதல்வரால் மக்களை காப்பாற்ற முடிந்தது. மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை கிண்டல் செய்த பாஜக, இன்றைக்கு உ.பியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பதற்கு பாஜகவை விட வேறு ஒரு ஆள் உலகத்திலேயே இல்லை. எனவே மக்கள் பாஜகவை எப்போதும் போல புறக்கணிக்க வேண்டும். அதிமுக பாஜகவின் கொத்தடிமையாகவே காலகாலத்துக்கும் இருக்கும். கூட்டணியை விட்டு செல்வது எல்லாம் தேர்தலுக்கான நாடகம்" என்றார்.