radharavi

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திலும், குறிப்பாக சென்னையில் பாதிப்பு பல மடங்காக உயர்ந்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

Advertisment

ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டதில் இருந்து, மக்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கினால் சிக்கிக் கொண்டவர்கள்இ-பாஸ் விண்ணப்பித்து சொந்த ஊருக்குதிரும்பலாம் என்று தமிழக அரசு ஏற்பாடு செய்தது. இதன் மூலம் பலரும் அவரவரின்சொந்த ஊர்களுக்குதிரும்பினார்கள்.

சில பிரபலங்களும் சென்னையை விட்டு, தங்களின் சொந்த ஊர்களுக்குசென்றார்கள். அண்மையில் இயக்குனர் பாரதிராஜாதேனிக்கு சென்று, பின்னர் தன்னை தானே தனிமைபடுத்திக்கொண்ட விஷயம் சர்சையானது. அதன்பின் அவர் அதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் நடிகர் ராதாரவிக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் தனிமைபடுத்தப்பட்டார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதனையடுத்து, ஓய்வெடுப்பதற்காக, கோத்தகிரிக்கு சென்று தனிமையில் ஓய்வெடுத்து வருவதாக வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார் ராதாரவி.