Skip to main content

“சசிகுமாரை பார்க்க அசிங்கமாக இருக்கிறது”- ராதாரவி பேச்சு 

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜவம்சம். இதில் நிக்கி கல்ராணி, ராதாரவி, விஜயகுமார், தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிந்து ரிலீஸுக்கு தயாரக இருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டார்கள்.
 

radharavi

 

 

அப்போது நடிகர் ராதாரவி பேசுகையில், “ராதாரவி பேசினாலே சர்ச்சை என்கிறார்கள். அது புரியாதவர்களுக்குதான் சர்ச்சை. புரிந்தவர்களுக்கு அது நல்ல பேச்சுதான். இந்த படத்தின் இயக்குனர் கதிர் ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்தவர். இந்த படத்தில்தான் ஹீரோ சக நடிகர்களின் தேதிகளுக்கு ஏற்றார்போல கொடுத்திருக்கிறார். சசி படத்தில்தான் வீரனாகவும், சூரனாகவும் நடிக்கிறாரே தவிர ரொம்ப தங்கமான பிள்ளை அவர்.

ஆனால், சினிமாவுக்கு லாயிக்கில்லாத மனிதர் சசிகுமார். தலையைக் குனிந்துக் கொண்டே நடந்து போவார். ஹீரோ என்றால் பந்தாவாக நடந்து செல்ல வேண்டாமா? நான் எல்லாம் அப்படியே பார்த்து பழகிவிட்டேன். அதனால் இவரை பார்க்கும்போது அசிங்கமா இருக்கிறது. இப்போதுள்ள ஹீரோக்கள் எங்கே போனாலும் பாடிகார்ட்ஸுடன் தான் வருகிறார்கள். அதனால்தான் அவருடைய படத்தை பார்க்க கூட்டம் இருக்கிறது என்று மக்கள் கூட்டம் வருவது இல்லை. நிறைய பாடிகார்ட்ஸ் இருக்கவும், ஓஹோ அவருக்கு நம்ம தேவையில்லை போல என நினைத்துவிடுகிறார்க்ள். புரட்சித் தலைவர் பாடிகார்ட்ஸோடு வந்து பார்த்திருக்கிறீர்களா? அவரை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். அதேபோல சிவாஜி கணேசன் எந்த பாடிகார்ட்ஸும் வைத்துக்கொள்ளவில்லை. தற்போதைய நடிகர்கள் போல பந்தா பண்ணாமல், மிகவும் எளிமையாக இருக்கிறார் சசிகுமார்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
cancer children fly in airplane with help of mime gopi

மெட்ராஸ், கபாலி, பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் மைம் கோபி. இவர் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அதன் மூலம் பெற்ற பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடுவதாகச் சொல்லியிருந்தார். அதனடிப்படையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சென்னை அண்ணா நகரில் உள்ள தேன் மொழி நினைவு அறக்கட்டளை உதவியுடன் ‘வான் உலா’ எனப் பெயரிட்டு சென்னையில் இருந்து பெங்களூர் வரை அழைத்துச் சென்றுள்ளார். இதற்காக அக்குழந்தைகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர்களை நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் வழியனுப்பி வைத்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மைம் கோபி, “இங்க இருக்கிற எல்லா மக்களும் என்னுடைய மக்கள். அதனால் இது உதவி கிடையாது. கடமை. எனக்கு விமானத்தில் போக 30 வருஷம் மேல் ஆனது. இந்த வாய்ப்பு இந்த குழந்தைகளுக்கு எப்போது கிடைக்கும். அதை ஏன் கொடுக்கக்கூடாது. இன்னொருத்தரை சந்தோசப்படுத்தி பார்ப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. சந்தோஷம் எந்தளவிற்கு கூடுதோ ஆயுள் கூடும் என்பார்கள். ஆயுள் கூடுவதற்கு நன்றாக சிரிக்கணும். இந்த குழந்தைகள் நன்றாக சிரித்தாலே நோய் விட்டுப் போய்விடும்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த உலா. விமானத்தில் முதல் தடவை பறக்கும் போது, நம்மை அறியாமல் பட்டாம்பூச்சி பறக்கும். இது வெறும் துவக்கம் தான். இன்னும் 3 மாதம் கழித்து இன்னொரு சூப்பரான விஷயத்தை பண்ணப் போகிறோம். பிறவியிலே பார்வையில்லாத, வாய் பேசாத, காது கேட்க முடியாத பிள்ளைகளை கூட்டிப் போக திட்டமிட்டிருக்கிறோம். அதையும் தாண்டி குழந்தைகளுக்கான நூலகம் ஆரம்பிக்கிறோம்” என்றோம்.