Skip to main content

"இது தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கக்கூடியது'' - ராதாரவி பாராட்டு

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

Radharavi

 

சென்னை கிண்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் இந்தியன் விருதுகள் 2022 நிகழ்ச்சி மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திரைப்பிரபலங்களான ராதாரவி, அபர்ணா பாலமுரளி, யோகி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ராதாரவி பேசுகையில், ”இந்த விருதை எனக்கு வழங்கியதற்கு நன்றி. மேடையில் நான் ஆங்கிலத்தில் பேசலாம் என்று நினைத்தேன். சீமானை பார்த்த பிறகு ஐயையோ... ஆங்கிலத்தில் பேசிவிடக்கூடாது என நினைத்தேன். இந்த விருது பெறுவதற்காக 350 மைலுக்கு அப்பால் இருந்து வந்துள்ளேன். எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது யாரோ கொடுத்திருக்க வேண்டியது; இவர்கள் கொடுத்திருக்கிறார்கள். விருதை எனக்கு காட்டிய உடனேயே ரொம்பவும் பிடித்து விட்டது. அது சகோதரர் சீமானின் சிம்பெல். இந்த விருதை ஜெயபாலன் கைகளில் இருந்து வாங்கியதில் மகிழ்ச்சி. நிறைய பேருக்கு இன்று விருது வழங்கியிருக்கிறார்கள். சின்னத்திரை, வெள்ளித்திரை, விளையாட்டுத்துறை என இங்கிருக்கும் அனைவருமே திறமையானவர்கள். அமைச்சர் கிரிக்கெட் அகாடமியை தொடங்கிவைத்து என் வாழ்நாளில் எங்கும் பார்த்ததேயில்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கக்கூடியது என நினைக்கிறேன். 

 

கடைசியாக இங்கிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு அறிவுரையைக் கூற விரும்புகிறேன், உங்கள் தாய், தந்தையை கடைசிவரை பார்த்துக்கொள்ளுங்கள். தயவு செய்து முதியோர் இல்லத்தில் விட்டுவிடாதீர்கள்” எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டப்பிங் யூனியன் தேர்தல்; மீண்டும் தலைவரான சீனியர் நடிகர் !

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Dubbing Union Election - Senior Actor radharavi as President again

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 – 2026ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 23 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போது தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீண்டும் போட்டியிட்டார்.  இவரை எதிர்த்து ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

ராதாரவி காலில் அடிப்பட்டுள்ளதால், தனது கைத்தடியுடன் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தார். அவருக்கு எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட சில நடிகர்கள் உதவியாக வந்திருந்தனர். மேலும் பல்வேறு நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்.  

 

Dubbing Union Election - Senior Actor radharavi as President again

இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது.  மொத்தம் 1017 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, ராதாரவி 662 வாக்குகள் பெற்று தனது எதிராக போட்டியிட்ட ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகியோரை விட 313 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். 

இதனிடையே 2024-2026-ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல், சென்னை வடபழனியில் கடந்த 16ஆம் தேதி நடந்தது. மொத்தம் 27 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.வி உதயகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பேரரசு, பொருளாளராக இயக்குநர் சரண், துணைத் தலைவராக அரவிந்த் ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இணைச் செயலாளராக சுந்தர் சி., எழில், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவரும் வட பழனியில் உள்ள சங்கத்தில் நேற்று பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சினிமா டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல்

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

cinema dubbing union office issue

 

சென்னை சாலி கிராமத்தில் நடிகர் ராதாரவி தலைமையில் தென்னிந்திய சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக சினிமா டப்பிங் யூனியன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடடத்தை கடந்த 2011ஆம் ஆண்டு ராதாரவி 45 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

ad

 

இந்த கட்டிடத்தை விதிகளை மீறி கட்டியுள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து பலமுறை ராதாரவியிடம் விளக்கம் கேட்கப்பட்டும் உரிய பதிலளிக்காமல் ராதாரவி காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது. 


 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த புகார் தொடர்பாக ராதாரவி தரப்பில் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது சினிமா டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளார்கள்.