Skip to main content

''இவர்களின் மறைவு என்னில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது'' - ராதாரவி இரங்கல்!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

ngngf

 

பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் பன்முகத் திறமைக் கொண்ட நடிகர் இர்ஃபான் கான் ஆகியோரின் அடுத்தடுத்த அதிர்ச்சியூட்டும் மறைவுக்கு நடிகர் டத்தோ ராதாரவி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்...

 

''பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் இர்பான் கான் ஆகியோரது மறைவு எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்தியிருகிறது. உயிர்கொல்லி கரோனா ஒரு புறம் உலகையே முடக்கி வைத்து பலி வாங்கிக்கொண்டிருக்க, இத்தகைய சூழலில் இந்த கலைத்துறை சொந்தங்களின் இழப்புகள் என்னை மிகவும் பாதிப்படைய செய்திருக்கிறது.   

 

‘மேரா நாம் ஜோக்கர்’ (1970) என்ற தனது தந்தை ராஜ் கபூரின் திரைப்படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், 2000 வரையிலே நாயகனாகவும், அதன்பின் தேர்ந்தெடுத்த சவாலான கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான ‘தி பாடி’ திகில் திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

 

நடிகர் இர்பான் கான் ஹிந்தி சினிமாவில் மட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்கத் திரைப்படங்களிலும் நடித்து உலகளாவிய ரசிகர்களைக் கொண்டவர். தனது 30 வருட திரைவாழ்வில், தேசிய விருது, ஆசிய விருது, மற்றும் இந்திய அரசின் நான்காவது மிகவும் உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதையும் வென்ற பெருமைக்குரியவர். 
 

http://onelink.to/nknapp


இத்தகைய சிறந்த கலைஞர்களின், சிறந்த மனிதர்களின் மறைவு என்னில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அவர்களது குடும்பங்களுக்கு இந்தச் சங்கடமான நேரத்தில் நான் ஆறுதல் கூறவும் கடமைப்பட்டிருக்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்.  

 

 

வருத்தங்களுடன்,
நடிகர் டத்தோ ராதாரவி''


எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டப்பிங் யூனியன் தேர்தல்; மீண்டும் தலைவரான சீனியர் நடிகர் !

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Dubbing Union Election - Senior Actor radharavi as President again

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 – 2026ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 23 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போது தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீண்டும் போட்டியிட்டார்.  இவரை எதிர்த்து ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

ராதாரவி காலில் அடிப்பட்டுள்ளதால், தனது கைத்தடியுடன் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தார். அவருக்கு எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட சில நடிகர்கள் உதவியாக வந்திருந்தனர். மேலும் பல்வேறு நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்.  

 

Dubbing Union Election - Senior Actor radharavi as President again

இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது.  மொத்தம் 1017 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, ராதாரவி 662 வாக்குகள் பெற்று தனது எதிராக போட்டியிட்ட ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகியோரை விட 313 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். 

இதனிடையே 2024-2026-ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல், சென்னை வடபழனியில் கடந்த 16ஆம் தேதி நடந்தது. மொத்தம் 27 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.வி உதயகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பேரரசு, பொருளாளராக இயக்குநர் சரண், துணைத் தலைவராக அரவிந்த் ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இணைச் செயலாளராக சுந்தர் சி., எழில், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவரும் வட பழனியில் உள்ள சங்கத்தில் நேற்று பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சினிமா டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல்

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

cinema dubbing union office issue

 

சென்னை சாலி கிராமத்தில் நடிகர் ராதாரவி தலைமையில் தென்னிந்திய சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக சினிமா டப்பிங் யூனியன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடடத்தை கடந்த 2011ஆம் ஆண்டு ராதாரவி 45 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

ad

 

இந்த கட்டிடத்தை விதிகளை மீறி கட்டியுள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து பலமுறை ராதாரவியிடம் விளக்கம் கேட்கப்பட்டும் உரிய பதிலளிக்காமல் ராதாரவி காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது. 


 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த புகார் தொடர்பாக ராதாரவி தரப்பில் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது சினிமா டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளார்கள்.