Advertisment

“அந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்” -விஜயகாந்த் குறித்து ராதாரவி!

radharavi

Advertisment

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்திற்கு லேசான கரோனா அறிகுறி தென்பட்டுள்ளதை அடுத்து, நேற்று இரவு அவர் தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.இந்நிலையில், விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரம் மட்டுமல்லாமல் மிகப்பெரிய அளுமையாக இருந்தவர் விஜயகாந்த். இதனால் பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் ராதாரவி விஜயகாந்த் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “எனது நீண்ட கால நண்பரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்துக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் பூரண நலம்பெற்றுத் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விரைவில் அவர் கரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்புவார்.

Advertisment

இந்தத் தருணத்தில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்னும் நாம் கரோனாவிலிருந்து முழுமையாக மீளவில்லை. தயவுசெய்து சமூகப் பொறுப்புடன் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். அடிக்கடி கைகளைச் சுத்தமாக சோப்பு போட்டுக் கழுவுங்கள். கரோனாவிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Radharavi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe