Skip to main content

“ஷங்கருடைய படங்கள் அந்த நாடகம்தான்”- ராதாரவி பேச்சு

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் நாடக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் ராதாரவி, பார்த்திபன், பாக்கியராஜ் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
 

radharavi

 

 

அப்போது பேசிய ராதாரவி நாடகங்கள் குறித்து பெருமையாக பேசினார். மேலும் பேசுகையில், “நாடகங்களை பார்த்து சினிமாக்களில் பலர் திருடிவிட்டனர். நான் பார்க்கும்போது, ரூபாய்க்கு மூன்று கொலை நடகத்தை பார்க்க ஷங்கர் உட்கார்ந்திருப்பார். அப்போது அவர் சின்ன பையன், வேறொரு ட்ரூபில் நடித்துக்கொண்டிருந்தார். அதனால் நாடகக்காரர்களுடன் வந்து பார்ப்பார்.

தற்போது பெரிய பெரிய படங்களெல்லாம் இயக்குகிறாரே அந்த சங்கர்தான். அந்த நாடகத்தை பார்த்து அவருக்கு வொர்க்கவுட்டாகி அன்றைக்கு ஆரம்பித்ததுதான். அவருடைய படங்களெல்லாம் பாருங்கள் ரூபாய்க்கு மூன்று கொலை நாடகத்தின் கான்செப்ட்தான் நான் அடித்துச் சொல்வேன். என்னிடம் வந்து அவரால் சண்டையிட முடியாது. அதெல்லாம் எனக்கு தெரியும் போ என்று சொல்லிவிடுவேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ஒன்றுகூடிய பிரபலங்கள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏ.ஆர் ரஹ்மான், மோகன்லால், சிரஞ்சீவி, ராம் சரண், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, ரன்வீர் சிங், நெல்சன், அனிருத், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.