பிரபல தெலுங்கு பட சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனான ராணா டகுபதி கடந்த 2010ஆம் ஆண்டு 'லீடர்' என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த நிலையில், 'பாகுபலி' படத்தில் வில்லனாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் ராணாவின் தாத்தா பிரபல தயாரிப்பாளர் ராமாநாயுடு, சித்தப்பா நடிகர் வெங்கடேஷ் டகுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் 'காடன்' என்ற படத்தில் நடித்துள்ளார் ராணா. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. கரோனா வைரஸ் பரவலால் படம் எப்போது ரிலீஸாகும் என்பதை அறிவிக்காமல் ஒத்திவைத்துள்ளது படக்குழு.
ராணா, சமூக வலைத்தளத்தில் திருமணத்திற்குத் தனது தோழி சம்மதம் தெரிவித்துவிட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து இரு வீட்டார் கலந்து கொண்டு பேசியபுகைப்படங்களையும் பகிர்ந்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ்தான் ராணாவின் காதலி.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்நிலையில் கடந்த வாரம், நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராணா நேரலையில் பேசினார். இதில் ராணா எப்படி மிஹீகாவைச் சந்தித்தார், எப்படித் திருமணம் பற்றிக் கேட்டார் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி லட்சுமியின் கேள்விகளுக்கு ராணா பதிலளித்தார்.
அந்தப் பேட்டியில் திருமண முடிவு குறித்து முன்னாள் காதலிகள் என்ன சொன்னார்கள் என்று ராணாவிடம் லட்சுமி மஞ்சு நையாண்டியாகக் கேட்டதற்கு, "நண்பர்களிடமிருந்து செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. எனது முன்னாள் காதலிகள் ஆசிர்வதித்தனர்" என்றார்.