Skip to main content

புஷ்பா படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தாதாசாகேப் பால்கே விருது கமிட்டி 

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

Pushpa won Best Film Award Dadasaheb Phalke Film Festival

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'புஷ்பா' திரைப்படம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் மிகப்பெரும் தொகையை வசூல் செய்து வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

 

இந்த நிலையில், தாதாசாகேப் பால்கே விருது-2022 இன் சிறந்த படமாக புஷ்பா திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இது தொடர்பான அறிவிப்பை ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்த தாதாசாகேப் பால்கே விருது கமிட்டி, புஷ்பா படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. தாதாசாகேப் பால்கே விருது குழுவின் இந்த அறிவிப்பு புஷ்பா படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம். அதே நேரத்தில், தாதா சாகேப் பால்கே விருது-2022இன் சிறந்த படத்திற்கான விருது புஷ்பா படத்திற்கு வழங்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘புஷ்ப ராஜ்...’ - அடுத்தடுத்த பாகங்கள் குறித்து அல்லு அர்ஜுன்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
allu arjun about pushpa 3

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ, கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 74வது பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் புஷ்பா படம் திரையிடப்படுகிறது. இதில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில இணையதளத்திற்கு பேட்டியளித்த அவர், “நிச்சயமாக புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை எதிர்பார்க்கலாம். நாங்கள் அதை ஒரு தொடராக உருவாக்க விரும்புகிறோம். அற்புதமான யோசனைகளும் திட்டங்களும் அடுத்தடுத்து உள்ளன. புஷ்பா 1 இல் பார்த்ததை விட புஷ்பா 2வில் வித்தியாசமான புஷ்பாவை பார்ப்பீர்கள். அதைவிட பெரிய படமாகவும் இருக்கும்” என்றார். 

Next Story

நடிகை தற்கொலை; புஷ்பா பட நடிகர் கைது

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Pushpa Actor jagadeesh Arrested regards actress passed away

 

தெலுங்கில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த துணை நடிகை ஒருவர் கடந்த 29 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் யாரோ ஒருவருடைய தூண்டுதலின் பெயரால் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் நடிகர் ஜெகதீஸ்தான் அந்த துணை நடிகையை மிரட்டி வந்ததாக அறியப்பட்ட நிலையில், அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். 

 

இவரும் அந்த துணை நடிகையும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து அந்த துணை நடிகை வேறோரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு உறவில் இருந்துள்ளார். அப்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் பொழுது ஜெகதீஸ் அதை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் கசிய விடுவேன் என துணை நடிகையை மிரட்டி வந்துள்ளார். இதன் அழுத்தம் காரணமாகவே துணை நடிகை தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.