Advertisment

பரபரப்பாக ரிலீசான 'புஷ்பா' முதல் சிங்கிள் பாடல்!

gfhsdhd

'அலா வைகுந்தபுரமலோ’ படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன், சுகுமார் இயக்கத்திலும் த்ரிவிக்ரம் இயக்கத்திலும் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதில், சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. கரோனாவால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸின் நவீன் எர்நேனி மற்றும் ஒய். ரவி ஷங்கர் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தில், நாயகியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார்.

Advertisment

பேன் இந்தியா படமாக உருவாகும் 'புஷ்பா' படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், ஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மரத் திருட்டு குறித்து ‘புஷ்பா’ படம் விவரிக்கிறது. சுமார் 270 கோடி ரூபாயில் உருவாகும் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் ஆகஸ்ட் 13 அன்று வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது. தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், 'புஷ்பா' முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'புஷ்பா' படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ஓடு ஓடு ஆடு’ பாடல், ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான ‘ஓடு ஓடு ஆடு’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நான்கு மொழிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை தமிழில் பென்னி தயால், தெலுங்கில் ஷிவம், மலையாளத்தில் ராகுல் நம்பியார், கன்னடத்தில் விஜய் பிரகாஷ், இந்தியில் விஷால் தத்லானி ஆகியோர் பாடியுள்ளனர்.

allu arjun pushpa
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe