Skip to main content

திடீர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு! ட்ரெண்டிங்கில் ‘புஷ்பா’!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

vgse

 

‘அலா வைகுந்தபுரமலோ’ படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன், சுகுமார் இயக்கத்திலும் த்ரிவிக்ரம் இயக்கத்திலும் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதில் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கரோனாவால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக இப்படத்தில் அல்லு அர்ஜூனின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் 'புஷ்பா' என்பதை வெளியிட்டது படக்குழு. மைத்ரி சினிமாஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தில், போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா என்பவர் ஒளிப்பதிவு செய்ய, டிஎஸ்பி இசையமைக்கிறார்.

 

hsfhbsf

 

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூனும், ஹீரோயின் ராஷ்மிகா மந்தானாவும் நடிக்க இருப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. அதில் அல்லு அர்ஜூனின் ஃபர்ஸ்ட் லுக்கை வைத்து பார்க்கும்போதே இவர்கள் இருவரின் கதாபாத்திரமும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பது தெரிகிறது. அதேபோல நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், அதைப் படக்குழு தற்போது வரை உறுதிபடுத்தவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் ஆரம்பித்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஆறு நிமிடத்திற்கு ஒரு சண்டை காட்சி இடம்பெறவுள்ளதாகவும், அதை ஆறு கோடி செலவில் இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களைப் பயன்படுத்தி உருவாக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், 'புஷ்பா' படத்தின் முன்னுரை வீடியோ வரும் ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 6.12 மணிக்கு வெளியாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்