Skip to main content

வலுக்கும் 24ஆம் புலிகேசி பிரச்னை... நஷ்ட ஈடு தரும் வடிவேலு...?

Published on 09/05/2018 | Edited on 10/05/2018
irumbu thirai.jpeg

 

vadivelu


வடிவேலு நடிப்பில் உருவான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு  சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படப்பிடிப்பில் பத்து நாட்கள் நடித்த வடிவேலு இயக்குனருடன் கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகினார். இதனால் படகுழுக்கு நஷ்டம் ஏற்பட்டு வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்கம் வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டதற்கு பதில் அளித்த வடிவேலு பட வேலைகளை தொடங்குவதில் தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தொடர்ந்து இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க இயலாது என்று பதில் அளித்தார். 

 

 

 

இதனால் ஒரு வருடத்துக்கும் மேலாக படப்பிடிப்பு முடங்கி உள்ள நிலையில் படத்துக்காக போடப்பட்ட அரங்குகளும் பிரிக்கப்பட்டு விட்டன. மேலும் தயாரிப்பாளர்கள் சங்கமும் நடிகர் சங்கமும் பல கட்டங்களாக சமரச முயற்சி மேற்கொண்டும் வடிவேலு பிடிவாதமாக அந்த படத்தில் நடிக்க மறுத்து வருகிறார். இதனால் படத்தை நிறுத்தி விடுவது குறித்து இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்காததால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு வடிவேலுவிடம் ரூ.9 கோடி நஷ்ட ஈடு பெற்று தரும்படி படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்திடமும் அணுகி உள்ளனர். மேலும் இந்த பிரச்சினையில் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தயாராகி வருகிறதனால் வடிவேலுக்கு நடிக்க தடை விதித்தாலோ அபராதம் விதித்தாலோ அதை எதிர்த்து அவர் கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

யார் இந்த கான்ட்ராக்டர் நேசமணி...? எதற்கு இவ்வளவு மீம்ஸ்..? ஒரு ருசிகர ரிப்போர்ட் !

Published on 30/05/2019 | Edited on 30/05/2019
vadivelu

 

விஜய், சூர்யா, வடிவேலு நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள காமெடியை மையப்படுத்தி #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர். சமீபத்தில் ஒரு சமூகவலைத்தள க்ரூப்பில் ஒரு சுத்தியலின் படத்தை ஒருவர் பதிவிட்டு உங்கள் ஊரில் இதன் பெயர் என்ன என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருவர் இதற்கு பெயர் சுத்தியல். இதை எதன்மீதாவது அடித்தால் ‘டங்க் டங்க்’ என சத்தம் வரும். பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி ஜமீன் மாளிகையில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது அவரது அண்ணன் மகன் ரமேஷ் கண்ணா, அவர் தலையில் போட்டுவிட்டார். இதனால் அவரது தலை உடைந்துவிட்டது. பாவம் என பதிவிட்டிருந்தார். இங்குதான் தொடங்கியது இந்த  #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக். 

 

 

இதைவைத்துதான் தற்போது நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான மீம்ஸ்களை கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு காண்டிராக்டர் நேசமணி என்ற கேரக்டரில் வீட்டிற்கு வெள்ளை அடிக்கும் காண்டிராக்டராக நடித்திருப்பார். ஒரு காட்சியில் சுவற்றில் உள்ள ஆணிகளை பிடுங்க வடிவேலு ரமேஷ் கன்னாவிற்கு உத்தரவு பிறப்பிற்பார். ரமேஷ் கண்ணா ஒரு படிக்கட்டு மேல் ஏறி ஆணிகளை பிடிங்கிக்கொண்டிருக்கும்போது கை தவறி சுத்தியல் கீழே நிற்கும் வடிவேலு தலையில் விழுந்து, அவர் மயக்கம் அடைந்து விடுவார். பிறகு சிறுது நேரம் கழித்து வடிவேலுவுக்கு தண்ணீர் தெளிக்கப்பட்டு கண்விழித்து விடுவார். இதைத்தான் நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ் மூலம் ட்ரெண்டாக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் வடிவேலுவின் காமெடிகள் தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு பெரும் தீனியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

வடிவேலு பேய் மாமாவா...? ரசிகர்கள் எதிர்பார்ப்பு !

Published on 06/03/2019 | Edited on 06/03/2019
vadivelu

 

 

'மெர்சல்' படத்திற்கு பிறகு '24ஆம் புலிகேசி' பட பிரச்சனையால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகர் வடிவேலு அடுத்ததாக முழுநீள காமெடி படமான 'பேய் மாமா' படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதோடு வடிவேலு படம் பொறித்த போஸ்டர் ஒன்றும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கவுள்ளதாகவும் அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று மற்றொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இருந்தும் ரசிகர்கள் மத்தியில் சக்தி சிதம்பரம் வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்தி சிதம்பரத்தின் என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், வியாபாரி படங்களில் ஏற்கனவே வடிவேலு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.