Skip to main content

மீண்டும் இணையும் புதுப்பேட்டை கூட்டணி... தயாரிப்பாளர் யார் தெரியுமா?

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

தற்போது தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
 

pudhupettai

 

இந்த படம் எடுத்துகொண்டிருக்குபோதே செந்தில்குமார் படத்திலும் தனுஷ் பிஸியாக நடித்து வந்தார். இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து தனுஷின் டேட்டிற்காக ராட்சசன் இயக்குனர் ராம்குமார், இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். இவர்கள்தான் அடுத்து தனுஷை வைத்து படம் எடுக்க போகிறார்கள் என்று முன்பே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிவிட்டன. 

கார்த்திக் சுப்புராஜுடன் இரண்டு வருடங்களுக்கு முன்பே தனுஷை வைத்து படம் இயக்குகிறார். அது முழுக்க முழுக்க வெளிநாடுகளில் உருவாகும் படம் என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்துதான் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து இயக்குகிறார் என்று தகவல் வெளியானது.
 

zombi


தற்போது மீண்டும் கார்த்திக் சுப்புராஜும் தனுஷும் இணைந்து பணிபுரிகின்றனர். லண்டனில் இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 60 நாட்கள் தனுஷ் தேதிகளை ஒதுக்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. 

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தையும் தாணு தயாரிக்கிறார். தாணு தயாரிப்பில் மூன்று படத்திற்காக ஒப்பந்தமாகினார் தனுஷ். இதில் வெற்றிமாறனும், மாரி செல்வராஜும் இயக்குகிறார்கள் என்று முன்னமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தாணு மூன்றாவதாக தனுஷை வைத்து தயாரிக்கும் படத்திற்கு யார் இயக்குனர் என்று பலரும் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், செல்வராகவன் தான் இயக்குனர் என்று தகவல் பரவி வருகிறது.
 

mahamuni


முன்னமே தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கப்போவதாக பல செய்திகள் வந்தன. யுவன்சங்கர் ராஜாதான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்த வருடம் இறுதியில்தான் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“செல்வராகவனை இயக்குவேன் என நினைத்ததில்லை” - தனுஷ்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
selvaraghavan look from dhanush 50 raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இப்படத்தில் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படம் தனுஷின் கனவு படம் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு அவரது கதாபாத்திர லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது செல்வராகவன் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. புது லுக்கில் செல்வராகவன் இடம்பெற்றிருக்கிறார். இதுவரையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் பல படங்கள் நடித்த நிலையில் இப்படத்தில் செல்வராகவனை தனுஷ் இயக்கியுள்ளார். செல்வராகவனை இயக்குவது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்களை ஒரு நாள் இயக்குவேன் என்று நினைத்ததில்லை சார்” என குறிப்பிட்டுள்ளார்.