தற்போது தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

Advertisment

pudhupettai

இந்த படம் எடுத்துகொண்டிருக்குபோதே செந்தில்குமார் படத்திலும் தனுஷ் பிஸியாக நடித்து வந்தார். இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து தனுஷின் டேட்டிற்காக ராட்சசன் இயக்குனர் ராம்குமார், இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். இவர்கள்தான் அடுத்து தனுஷை வைத்து படம் எடுக்க போகிறார்கள் என்று முன்பே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிவிட்டன.

கார்த்திக் சுப்புராஜுடன் இரண்டு வருடங்களுக்கு முன்பே தனுஷை வைத்து படம் இயக்குகிறார். அது முழுக்க முழுக்க வெளிநாடுகளில் உருவாகும் படம் என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்துதான் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து இயக்குகிறார் என்று தகவல் வெளியானது.

Advertisment

alt="zombi" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f0e6f07e-85aa-4a56-9feb-443372d0be7c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/zombi-336x150_9.jpg" />

தற்போது மீண்டும் கார்த்திக் சுப்புராஜும் தனுஷும் இணைந்து பணிபுரிகின்றனர். லண்டனில் இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 60 நாட்கள் தனுஷ் தேதிகளை ஒதுக்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தையும் தாணு தயாரிக்கிறார். தாணு தயாரிப்பில் மூன்று படத்திற்காக ஒப்பந்தமாகினார் தனுஷ். இதில் வெற்றிமாறனும், மாரி செல்வராஜும் இயக்குகிறார்கள் என்று முன்னமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தாணு மூன்றாவதாக தனுஷை வைத்து தயாரிக்கும் படத்திற்கு யார் இயக்குனர் என்று பலரும் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், செல்வராகவன் தான் இயக்குனர் என்று தகவல் பரவி வருகிறது.

Advertisment

alt="mahamuni" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="402d0247-03bd-4331-aa0d-439ab41df4cc" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Mhamuni-336x150.jpg" />

முன்னமே தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கப்போவதாக பல செய்திகள் வந்தன. யுவன்சங்கர் ராஜாதான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்த வருடம் இறுதியில்தான் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.