Skip to main content

''மக்கள் அணுஅணுவாகச் சித்திரவதை அனுபவிக்கிறார்கள்'' - தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் வேதனை!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

rygsr

 

கரோனா பாதிப்பால் பாதிக்கபட்ட மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து உதவி வருகிறது. இன்று கோவில் நடைபாதை வியாபாரம் செய்யும் 110 பெண்களுக்கு கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் அரிசி மூட்டைகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வழங்கினார். மேலும் தமிழகம் முழுவதும் கோவில்களைத் திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனுக்கள் வழங்கிய அவர் பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து பேசிய போது...
 

 

இங்கே 100 அபலை பெண்களின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன். புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர், திருப்போரூர் முருகன் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் போன்ற அனைத்து வழிபாட்டு ஸ்தலங்களும் கடந்த 60 நாட்களாக கரோனா பிரச்சனையால் மூடி கிடக்கின்றன. பக்தர்கள் குறிப்பாகப் பெண்கள் கோயில்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் மனஉளைச்சலில் உள்ளனர். இதனால் வீட்டில் எதிர்மறை சக்திகளால் சண்டை சச்சரவு ஏற்பட்டு பலரும் மனநோயாளிகள் ஆகும் அளவிற்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள். உலகிலேயே இந்தியா சிறந்த இறைநம்பிக்கை மிகுந்த நாடு. மக்கள் நம்பிக்கையோடு இறைவனை வேண்டினால் நாட்டு மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் விலகும். கண்ணுக்குத் தெரியாத கரோனா என்ற எதிரியை ஒழிக்க ஒன்றுபட்ட மக்களின் இறைவழிபாடு அவசியமாகிறது. அது மட்டுமின்றி காலை மாலை அனைவரும் குளித்து சுத்தமாகக் கோயிலுக்கு வருவதால் சுகாதார பிரச்சனை எழாது. குறிப்பாகக் கோயில் வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள பூசாரிகள், ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி அரசுக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான காணிக்கை வரவு தடைபட்டுள்ளது.

ஆகவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும், கலெக்டர் பெருமக்களும் கோவில்களைத் திறந்து மக்கள் வழிபட வழி செய்ய வேண்டும். தவறினால் ஆயிரகணக்கான பெண்கள், பொது மக்கள் உதவியுடன் கலப்பை மக்கள் இயக்கம் போராடும். உண்ண உணவின்றி, செலவுக்குப் பணமின்றி, வேலை தொழில் செய்ய வழியின்றி மக்கள் அணுஅணுவாக சித்திரவதை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதலையும், நிம்மதியையும் தருவது கோவில்கள் மட்டுமே. கரோனா விழிப்புணர்வு அனைத்து மக்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே கட்டுப்பாடுடன் கண்ணியத்துடனும் நடந்து கொள்வார்கள் என நாங்கள் நம்பிக்கை அளிக்கிறோம். தாங்களும் தகுந்த பாதுகாப்பு, கட்டுப்பாடுகளுடன் ஆலயங்கள், மசூதிகள் தேவாயங்களைத் திறந்து மக்களுக்கு நிம்மதியைத் தாருங்கள்'' என்று பி.டி செல்வகுமார் பேசினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜித்துக்கும் விஜய்க்கும் இருந்த மனத்தாங்கல் - சுவாரசியம் பகிரும் பிஆர்ஓ பி.டி. செல்வகுமார்

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

PT selvakumar interview about vijay & ajith

 

நடிகர் விஜய் உடன் பல ஆண்டு காலம் இருந்த, அவருடைய முன்னாள் பி.ஆர்.ஓ  பி.டி. செல்வகுமார் திரையுலகில் தன்னுடைய பல்வேறு அனுபவங்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

விஜய்யோடு 25 ஆண்டுகள் பணிபுரிந்த நீங்கள் அவருடைய சமகாலப் போட்டியாளரான அஜித்துடன் 'ஆழ்வார்' படத்திலும் பணிபுரிந்தீர்கள். எப்படி அது நடந்தது?

 

"இவர் விஜய் ஆளு" என்கிற முத்திரை என் மேல் விழுந்திருந்த நேரம் அது. விஜய் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நான் கவனித்து வந்தேன். 'ஆழ்வார்' படத்தின் தயாரிப்பாளருக்கு நான் நீண்டகாலமாக பி.ஆர்.ஓ-வாக இருந்தேன். ஆழ்வார் பட வாய்ப்பு வந்தபோது அவரிடம் "இது சாத்தியமா? அஜித் அனுமதிப்பாரா?" என்றேன். ஆனாலும் என்னை அந்தப் படத்தின் பிஆர்ஓ ஆக்கினார்கள். அஜித் என்ன சொல்வாரோ என்கிற பதற்றம் எனக்கு இருந்தது. ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொண்டார். அதுதான் அவரின் பெருந்தன்மை. விஜய்யிடம் இதுகுறித்து தவறாகச் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்த பலர் முயன்றனர். ஆனால் விஜய்யும் உண்மை நிலையைப் புரிந்துகொண்டார்.

 

ஆழ்வார் படத்தில் பணிபுரியும் போது அஜித்தோடு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் என்ன?

 

அஜித் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். கடுமையான உழைப்பாளி. அடுத்தவர் வேலையில் தலையிடமாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். மிகுந்த துணிச்சல்காரர் அஜித். 

 

விஜய் -அஜித் இருவருடைய நட்பு எப்படிப்பட்டது?

 

ஆரம்பத்தில் இருவருக்கும் மனத்தாங்கல்கள் இருந்தன. அதன் பிறகு இருவரும் பரஸ்பரம் ஒருவருடைய நிகழ்வுக்கு இன்னொருவர் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். அதன் மூலம் ஒரு நட்பு இருவருக்கும் உருவானது. இருவருக்குமே நம்பர் ஒன்னாக வரவேண்டும் என்கிற எண்ணம் இருக்குமே தவிர, ஒருவர் பற்றி இன்னொருவர் குறை கூற மாட்டார்கள். 

 

விஜயகாந்த்தோடு உங்களுடைய அறிமுகம், அவருடன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து...

 

விஜயகாந்த் ஒரு அபூர்வமான மனிதர். அவருடைய உழைப்பு அசுரத்தனமானது. ஒரே நேரத்தில் பல படங்களில் பணியாற்றுவார். அதனால் அவருடைய உடலை அவர் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை. திருமண உதவிக்காக ஒருவரை அழைத்துச் சென்றபோது யோசிக்காமல் உடனடியாக 2 லட்சம் கொடுத்தார். தங்கமான மனிதன். அனைவரோடும் உரிமையுடன் பழகுவார். 

 

சூர்யாவோடு நீங்கள் பல படங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள். அவருடைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

முதலில் அவருக்கான சூழல் சரியாக இல்லை. ஆனால் முன்னணி நடிகராக வருவதற்கு அவர் அப்போதிலிருந்தே கடுமையாக உழைத்தார். நான் விஜய்யுடன் இருப்பதால் சூர்யாவுக்காக எப்படி பணியாற்றுவேன் என்கிற சந்தேகம் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இருந்தது. ஆனால் அவருக்காகவும் நான் சிறப்பாகப் பணியாற்றி அவர்களுடைய பாராட்டுகளைப் பெற்றேன். கஜினி படத்தின் போது நான் ஒரு சரியான பிஆர்ஓ என்று சூர்யாவே சொல்லியிருக்கிறார்.


 

Next Story

மேடை மற்றும் இசை கலைஞர்களுக்கு விஜய் பட தயாரிப்பாளர் உதவி!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020
pt selvakumar

 

கரோனா வைரஸ் உலகத்தையே அசச்சுறுத்தி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயாரிப்பாளர் PT செல்வகுமார் தொடர்ந்து 65 நாட்களாக உதவி செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று குமரி மாவட்டத்தை சேர்ந்த மேடை கலைஞர்கள், இசை கலைஞர்கள், சமையல் தொழிலாளர்கள், பந்தல் செட் அமைப்பவர்கள், தையல் தொழிலாளர்கள் 108 பேருக்கு அரிசி மூட்டைகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. இதில் அதிமுக டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு. தளவாய் சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

நிகழ்ச்சியை தொடர்ந்து தயாரிப்பாளர் PT செல்வகுமார் பேசுகையில், “மதம், இனம், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு கலப்பை மக்கள் இயக்கம் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக குமரி மண்ணில் சமத்துவ பொங்கல், 58 பசுக்களுடன் கோ பூஜை போன்றவற்றை நடத்தினோம். தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த கலைஞர்களுக்கு தளவாய் சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு வழங்கியது அனைவருக்கும் உற்சாகம் தருகிறது. குமரி மக்களின் குரலாக டெல்லியில் ஒலித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் இந்த நிகழ்வுக்கு அழைத்ததும் உடனடியாக எப்போது வரவேண்டும் என்று பெருந்தன்மையோடு கேட்டார். அவர் இதை போன்று பண்போடும், அதிகாரத்தோடும், நீண்ட ஆயுளோடு இருக்க  இறைவனை வேண்டுகிறோம்” என்றார். பின்னர் மக்கள் அனைவருக்கும் சத்து மாத்திரை வழங்கப்பட்டது.