Skip to main content

"சென்சார் போர்டு அடிபணிந்துவிட்டது" - தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பாளர்

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

producer Vipul Shah about The Kerala Story film uk release

 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இப்போது வரை ரூ.150 கோடியை கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் டீசர் வெளியான பின்பு தொடர் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

 

இதனிடையே தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் கடந்த 7 ஆம் தேதி மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன. அதன்படி படம் திரையிடப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இப்படத்தை திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

இப்படம் கடந்த 12 ஆம் தேதி இங்கிலாந்தில் இந்தி மற்றும் தமிழில் வெளியாக இருந்தது. ஆனால் அந்நாட்டில் தணிக்கை குழு சான்றிதழை வழங்காததால் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இந்நிலையில் இப்படம் இன்று முதல் அங்கு வெளியாகிறது. இது குறித்து இயக்குநர் சுதிப்தோ சென், “பிரிட்டன் வென்றுவிட்டது. பயங்கரவாதம் தோற்றது. இப்போது பிரிட்டிஷ் மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான மிகப்பெரிய புரட்சியைப் பார்ப்பார்கள்" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

 

இந்நிலையில் இப்படம் இங்கிலாந்தில் வெளியாவது குறித்து தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா பேசுகையில், "பிரிட்டனின் சென்சார் சான்றிதழ் நிறுவனம் நேற்று சான்றிதழை வழங்க வேண்டி இருந்தது. அங்கு பொதுமக்களின் அழுத்தம் அதிகமாக இருந்தது. சில அரசியல்வாதிகள் சட்ட விரோதமாக படத்தை நிறுத்த முயன்றனர். பிரிட்டனின் சென்சார் போர்டு பொதுமக்களின் அழுத்தத்திற்கு முன் அடிபணிய வேண்டியதாயிற்று. அதனால் இன்று படம் வெளியாகியுள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம்; முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
The Kerala Story film issue Chief Minister Pinarayi Vijayan strongly condemned

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இந்தி படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் இப்படம் இருப்பதாக சர்ச்சையானது. தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன.

அதே சமயம் மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தூர்தர்ஷனில் இன்று (05.04.2024) இரவு 8 மணிக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பினராயி விஜயன் தெரிவிக்கையில் “அரசு தொலைக்காட்சிகள் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக  ஒரு போதும் மாறக்கூடாது. வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி ஒளிப்பரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் சர்ச்சைக்குள்ளான படம்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
the kerala story ott update

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இந்தி படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் இப்படம் இருப்பதாக சர்ச்சையானது. 

தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன. மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். ஆனால் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது.

இதையடுத்து படம் வெளியாகி பல மாதங்கள் கழித்து இப்படம் ஓடிடியில் வெளியாகவில்லை. பல முன்னணி நிறுவனங்கள், இப்படத்தை வாங்க தயக்கம் காட்டி வருவதாகத் தகவல் வெளியானது. மேலும் ஒரு முன்னணி நிறுவனம் இப்படத்தின் கதைக்கரு மற்றும் ஏற்கனவே கிளப்பிய சர்ச்சை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி வாங்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 16 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.