Skip to main content

“த்ரிஷா வாங்கிய சம்பளத்தில் பாதியை திரும்பி தர வேண்டும்”- தயாரிப்பாளர் டி. சிவா எச்சரிக்கை

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

திருஞானம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 

t siva

 

 

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 28-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் டி.சிவா, “திருஞானம் என்னுடை நெருங்கிய நண்பர். படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, பார்த்த நண்பர்கள் படம் அருமையாக இருப்பதாக சொன்னார்கள். படத்தினுடைய ரீ ரெக்கார்டிங் சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார்கள். அம்ரீஷுக்கு படம் இன்னும் சரியாக அமையவில்லை, ஆனால் அவருக்கு நேரம் இருக்கிறது கண்டிப்பாக மேலும் உட்சத்தை தொடுவார்.  

திருஞானம் எவ்வளவு கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு இந்த படத்தை எடுத்தார் என்று எனக்கும் தெரியும். இன்றைக்கு பெரிய ஹீரோக்களை போட்டு எடுக்கும் படங்களே போட்ட காசை எடுக்கிறதா என்பது கேள்வி குறியாக இருக்கும்போது ஹீரோவே அல்லாமல் பிஸினஸிற்கான பேஸ்கூட இல்லாமல் ஸ்டார் வேல்யுவோடு ஒரு படம் செய்திருக்கிறார். அந்த படத்தை திரையில் அவரே வெளியிடவும் செய்கிறார். முழுக்க முழுக்க ரிஸ்க் எடுத்து பண்ணிக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக இந்த படம் வெற்றியடையும், போட்ட காசை எடுக்கும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. 

இருந்தாலும் ஒரு பெரிய ஹீரோ வைத்து படம் எடுக்கும்போது ஹீரோயின் புரொமோஷனுக்கு வருகிறாரோ இல்லையோ ஹீரோவை வைத்து புரொமோஷன் செய்துவிடலாம். ஆனால், இந்தமாதிரி கஷ்டப்பட்டு ஒரு ஹீரோயினை நம்பி, அவ்வளவு சம்பளம் கொடுத்து படம் பண்ணியிருக்கும்போது, அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என்கிற எண்ணம் அது யாராக இருந்தாலும் வரவேண்டும். அது வரவில்லை என்றால் ரொம்ப வருத்தமான விஷயம். 

இந்த படத்தில் புரொமோஷன் பண்ண யாராலும் முடியாது. த்ரிஷாவை தவிர மற்றவர்கள் எல்லாம் அறிமுகமாகவும், புதுமுகமாகவும் இருப்பதால் புரொமோஷன் பண்ண முடியாது. இந்த படத்தின் கதாநாயகி இன்று வரமுடியாதற்கு அவருடைய சூழ்நிலையாக கூட இருக்கலாம் ஆனால் அடுத்த வாரம் ரிலீஸாகும் படத்திற்கு முன்பு நடைபெறும் புரொமோஷனில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படியில்லை என்றால் அவர் வாங்கிய சம்பளத்திலிருந்து பாதியை திருப்பி தர வேண்டி வரும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பாக எச்சரிக்கையாக சொல்கிறேன். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
trisha do a cameo role in vijay the goat movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்து விடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இப்படத்தில் த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பில் இரண்டு நாள் கலந்து கொண்டுள்ளதகவும் கூறப்படுகிறது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆறாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அவர் நடிக்கிறார். ஆதி, திருப்பாச்சி, கில்லி, குருவி, லியோ கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Next Story

மன்சூர் அலிகானுக்கு விதித்த உத்தரவு ரத்து

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
mansoor ali khan trisha case update

மன்சூர் அலிகான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பல்வேறு பிரபலங்கள், தமிழ் திரையுலகை சார்ந்த சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பின்பு இது குறித்து விளக்கமளித்த மன்சூர் அலிகான், நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புவதாக கூறி மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்திருந்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். த்ரிஷாவும் மன்னித்துவிட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பின்பு இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பியது சென்னை காவல்துறை. பின்பு த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டிருந்தனர். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என த்ரிஷா பதில் கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலி கான். அவர்கள் மூவரும் தலா ரூ.1 கோடி தர உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சதிஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க ஆணை பிறப்பித்து ஒத்தி வைத்தார். அடுத்த விசாரணையின் போது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கில் மனு தொடரப்பட்டுள்ளதாக கூறி மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் அபராதத் தொகையை 2 வாரங்களில் சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டார். இதையடுத்து நடந்த விசாரணையில் மன்சூர் அலி கான் தரப்பில், அபராதத் தொகையை செலுத்த பத்து நாட்கள் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தது. அவரது கோரிக்கை ஏற்று 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைக்கபட்டது. 

இதனை தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் மன்சூர் அலி கான். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தனி நீதிபதி முன் மன்சூர் அலிகான் வலியுறுத்தலாம் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கானது விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது தனி நீதிபதி விதித்த ரூ.1 லட்சம் அபராத உத்தரவை ரத்து செய்துள்ளது. மேலும் த்ரிஷாவிற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை மட்டும் உறுதி செய்தது.