/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/10_40.jpg)
ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம நாராயணனின் மகனான தேனாண்டாள் முரளி, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள முரளி, தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பதவிவகித்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)