Advertisment

“ஓ சொல்றியா மாமா... பாடல் இன்றைய இளைஞர்களின் தேசிய கீதம்" - தயாரிப்பாளர் தாணு பேச்சு!

producer thanu talk about samantha danced pushpa movie song

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.நடிகை சமந்தா, ‘புஷ்பா’ படத்தில் ‘ஓ சொல்றியா..' என்ற குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisment

இதனைத்தொடர்ந்து சமந்தா நடனமாடிய இப்பாடலின் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக கூறி ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தயாரிப்பாளர் தாணு இப்பாடலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். புஷ்பா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் தாணு, " ஓ சொல்றியா மாமா பாடல் இன்றைய குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு தேசிய கீதமாக அகிலமெங்கும் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

allu arjun kalaipuli s thanu pushpa samantha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe