Skip to main content

'டீசரில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரைலர் தான்' - K13 படம் சொல்லும் வழிமுறை 

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

எஸ்.பி. சினிமாஸ் சார்பில் எஸ்பி சங்கர் மற்றும் சாந்தபிரியா தயாரிக்க, அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் 'K13'. பரத் நீலகண்டன் இயக்கி, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து படத்தின் இசை மிக விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறையில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 

 

k13

 

எஸ்.பி. சினிமாஸ் தயாரிப்பாளர் எஸ்.பி. ஷங்கர் இது குறித்து பேசும்போது...."டீசரில் ரசிகர்கள் பார்த்தது மிகவும் சாதாரண விஷயங்கள் தான். படத்தில் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமான ஆச்சர்யங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும். இந்த டிரெய்லர் உளவியல் ரீதியாக ரசிகர்களை தயார்படுத்துவதற்கான ஒரு வழிமுறை தான். எங்கள் புத்திசாலித்தனமான ரசிகர்கள் டிரெய்லரின் உண்மையான இலக்கணத்தை புரிந்து கொண்டதும், அதில் முக்கிய கதாபாத்திரங்களை புரிந்து கொண்டதும், அதை பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாடல்களை விரைவில் வெளியிடவும், இந்த கோடை விடுமுறையில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறோம்.

 

 

தயாரிப்பாளர்கள் அருள்நிதியை பற்றி தொடர்ந்து புகழ்ந்து வருவதை பார்க்க செயற்கையாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை, இது ஒன்றும் புதிதல்ல. இன்று, சமூக ஊடகங்கள் மற்றும் வலை தளங்களில் பார்வையாளர்களிடமிருந்து வரும் பல கருத்துக்களில் அருள்நிதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படங்கள் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது தெளிவாகிறது. அவர் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து இப்படிப்பட்ட ஒரு நற்பெயரை சம்பாதித்திருக்கிறார். அவர் நடித்தால் அந்த திரைப்படத்திற்கு அதுவே பெரிய அளவில் வலு சேர்க்கிறது. இதனை ஒரு தயாரிப்பாளராக வெறுமனே சொல்லவில்லை, மக்கள் ஏற்கெனவே அவரை அங்கீகரித்து, பாராட்டியுள்ளனர்" என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதற்கு மேல் எது சொன்னாலும் சஸ்பென்ஸ் போய் விடும்' - சீட்டின் நுனியில் அமர்த்தும் k13 டீசர் ! 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இயக்குனர் பரத் நீலகண்டனின் 'K13' பட டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 84 விநாடிகள் ஓடும் இந்த டீசர் பார்வையாளர்களிடையே படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது.மேலும் இது குறித்து இயக்குனர் பரத் கூறும்போது...

 

k13

 

"டீசரை இறுதி வடிவத்துக்கு கொண்டு வர மிகவும் சவாலாக இருந்தது. வேறு பல பதிப்புகளையும் தயார் செய்தோம். என் குழுவுக்கு நன்றி, குறிப்பாக இதை கிரியேட்டிவாக அணுகிய படத்தொகுப்பாளர் ரூபனுக்கு நன்றி. இதற்கு மேல் எதையும் சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும். இது ஒரு திரில்லர் படம் தான், மற்றவற்றை பார்வையாளர்களே பெரிய திரைகளில் பார்த்து அனுபவிக்கட்டும். நாங்கள் இந்த டீசர் வெறும் ஒரு முன்னோட்டமாக மட்டும் இருப்பதை விரும்பவில்லை, மாறாக கதாபாத்திரங்களை பற்றி சொல்ல முயற்சித்தோம். இப்போதெல்லாம் பார்வையாளர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் படம் பார்க்கும் முன்பு சின்ன கதாபாத்திரங்களை கூட தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே நாங்கள் இதை முயன்றோம், இப்போது மக்கள் அந்த கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்த பிரியா தயாரிக்கின்றனர். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 

 

 

Next Story

திரிஷா இல்லனா நயன்தாரா, அஅஅ படங்களை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படம் 

Published on 11/03/2019 | Edited on 11/03/2019
aadhik

 

அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, பரத் நீலகண்டன் இயக்கும் 'கே13' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இது குறித்து இப்பட இயக்குனர் பரத் நீலகண்டன் கூறும்போது...."ஸ்கிரிப்ட்டை முடித்தவுடன், இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நல்ல நடிகரை தேடிக்கொண்டிருந்தேன். இந்த படத்தில் முழு திரில்லர் விஷயங்களையும் இந்த கதாப்பாத்திரம் தான் தூண்டுகிறது. தனிப்பட்ட முறையில், ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என நான் உணர்ந்தேன். அவரிடம் இணை இயக்குனர்களாக இருக்கும் என் நண்பர்கள் மூலம் அவரை அணுகினேன். அவர் நடிக்கும் காட்சிகளில் நடிகை காயத்ரியும் இருந்தார், இருவருமே மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். 

 

 

இப்போது கூட, நாங்கள் இந்த குறிப்பிட்ட காட்சியை படம் பிடித்ததை பற்றி நினைக்கும்போது, அது உற்சாகத்தை கொடுக்கிறது. இந்த படத்தின் முதல் ஷாட் அது தான், அனுபவம் வாய்ந்த இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், காயத்ரி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரிடம் வேலை வாங்குவது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் இங்கு அதற்கு நேர்மாறாக இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் ஒரு மிகச்சரியாக நடித்துக் கொடுத்தார்.படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் மற்றும் பாராட்டப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார். எஸ்பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த 'கே13' படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.