Skip to main content

ஆர்.கே.செல்வமணிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

Published on 18/02/2019 | Edited on 18/02/2019
rk selvamani

 

 

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தேர்தல் நேற்று பிப்ரவரி 17 ஆம் தேதி நடந்தது. இதில் மீண்டும் ஆர்.கே.செல்வமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் செயலாளர்களாக  சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்