கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியாமணி அதன் பிறகு நடித்த 'பருத்திவீரன்' படத்திற்காக தேசிய விருது பெற்றார். இதையடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் பிஸியான அவர் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் வெற்றிகரமாக நடிகையாக வலம் வரும் இவர் ஜோதிகா, சமந்தா போல் திருமணத்திற்கு பிறகும் கூட கதாநாயகியாக நடிப்பது பற்றி பேசியபோது... "திருமணத்திற்கு பிறகும் நடிகைகள் நாயகியாக நடிப்பது ஆரோக்கியமான ஒன்று. ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டாலே அவர்கள் அக்கா, அண்ணி வேடங்களுக்கு தான் என்று ஒதுக்கி வைத்ததை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அது மாறி இருக்கிறது. இது தொடர வேண்டும்" என்றார்.
ஜோதிகா, சமந்தாவை அடுத்து பிரியாமணி....
சார்ந்த செய்திகள்
Next Story
பீட்டா அமைப்புடன் கூட்டணி - கோயிலுக்கு பிரம்மாண்ட பரிசு வழங்கிய பிரியாமணி
இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாகவுள்ளார் பிரியாமணி. கடந்த மாதம் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது மைதான், கன்னடத்தில் கைமாரா மற்றும் தமிழில் கொட்டேஷன் கேங் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், பீட்டா அமைப்புடன் இணைந்து இயந்திர யானையை கோவிலுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் பிரியாமணி. கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை கோவில்களில் இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இந்த முன்னெடுப்பில் அவர்களுடன் கைகோர்த்த பிரியாமணி, கேரளா கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு, இயந்திர யானையை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார். இந்த கோயிலில் யானைகளை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ கூடாது என்ற முடிவை பின்பற்றி வருகிறார்கள். இயந்திர யானைக்கு மகாதேவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது இயந்திர யானை இதுவாகும்.
இது குறித்துப் பேசிய அவர், “தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என்பது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நமது வளமான கலாச்சார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும்” என்றுள்ளார்.
Next Story
“மக்கள் சரியான தகவலைத் தெரிந்துகொள்ள இப்படம் உதவும்” - பிரதமர் மோடி
ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியா மணி, அருண் கோவில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்டிக்கிள் 370’. பி62 ஸ்டூடியோஸ், தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்திற்கு ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், வருகிற 23 ஆம் தேதி இந்தியில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய தடையாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது. அப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால், தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 400 இடங்களிலும் வெற்றிபெற உதவுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வாரம் சட்டப்பிரிவு 370 பற்றிய திரைப்படம் வெளியாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மக்கள் சரியான தகவலைத் தெரிந்துகொள்ள இப்படம் உதவும். அது நல்ல விஷயம்” என்றார்.