Advertisment

"இனி ஒருபோதும் இது நடக்கக் கூடாது!" - பிரியா பவானி ஷங்கர் வேதனை!

ggegdged

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

Advertisment

இந்த நிலையில், இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கரோனா தொற்றால் காலமானார். இவருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிந்துஜா மரணமடைந்தார். சிந்துஜாவின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் மறைந்த அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் அதில்...

Advertisment

"இது மிகவும் வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு வாழ்க்கையும் விட்டுச்செல்லும் சோகமான செய்தி இது. அது யாருக்கும் ஏற்படலாம். நீங்கள், நான், நம் அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என யாருக்கும் ஏற்படலாம். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். இனி ஒருபோதும் இது நடக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். அருண்ராஜா காமராஜுக்கு பலத்தையும், தைரியத்தையும் கொடுக்க நான் கடவுளை மனதார பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

priya bhavani shankar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe