வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். இதனையடுத்து இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். தற்போது ஆதித்ய வர்மா மற்றும் சுமோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இவர் முன்பு போல பல படங்களில் நடிக்காமல் மிகவும் குறிப்பிட்ட சில படங்களை மட்டும் தேர்ந்து எடுத்து நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியுள்ளது, “ஏனோதானோனு நிறைய படங்கள் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. எது வொர்க் அவுட் ஆகும் ஆகாதுனு என்னால கணிக்க முடியுது. ஆரம்ப காலங்களில் சில காரணங்களுக்காக எனக்கு வரும் எல்லா படங்களுக்கும் ஓகே சொல்லியிருக்கேன்.
நான் எவ்ளோ இடைவெளி விட்டு படம் பண்ணாலும் மக்கள் என்னை என்கரேஜ் பண்றாங்க. அதை `எல்.கே.ஜி’ படத்துல உணர்ந்தேன். ரெண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்ல `எல்.கே.ஜி’ படத்துல நடிச்சேன். அதுக்கு எனக்கு கிடைச்ச வரவேற்பைப் பார்த்து தியேட்டர்ல கண்கலங்கிட்டேன். நிறைய பெரிய நடிகர்கள் கூட நடிச்சாத்தான் இந்த மாதிரி ரெஸ்பான்ஸ் இருக்கும். ஆனால், எனக்கு அது எதுவும் இல்லாமல் இந்தளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது ரொம்ப சந்தோசம். அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ணாதான் ஹீரோயின்னு கிடையாது. பேமிலி ஆடியன்சுக்குப் பிடிக்கிற மாதிரி தரமான படங்கள்ல மட்டும்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றார்.