Skip to main content

'தனியாக இருப்பதே நல்லது' - பிரியா ஆனந்த் 

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
priya anand

 

 

 

பிரியா ஆனந்த் நடிப்பில் 'காயம்குளம் கொச்சுண்ணி' மலையாள படம் அடுத்து வெளியாகவுள்ள நிலையில் இவர் தற்போது தமிழில் 'எல்.கே.ஜி' படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆர்.ஜெ. பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கும் பிரியா ஆனந்த் தன் திருமணம் குறித்து பேசியபோது.... "கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற கட்டாயத்தின் பேரில் கல்யாணம் பண்ணிக்கத் தேவையில்லை. பாட்டி காலத்துல தான் ஒரு பொண்ணுனா கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்வாங்க. ஆனா, இப்போ கல்யாணம் பண்ணாமலும் சில பெண்கள் இருக்காங்க. நான் என்ன படிக்கணும், எந்த வேலைக்குப் போகணும், எப்படி இருக்கணும்னு முடிவு பண்ற பெண்களுக்கு யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற பக்குவமும் இருக்கு. சரியான ஒரு நபர் கிடைச்சா, தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லைனா தனியாக இருப்பதே நல்லது" என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சம்பளத்துக்காக மட்டும் நடித்ததில்லை'.... ப்ரியா ஆனந்த் பேச்சு

Published on 04/07/2018 | Edited on 05/07/2018

mr.chandramouli

 

priya anand

 

 

 

சில கால இடைவெளிக்கு பிறகு நடிகை ப்ரியா ஆனந்த் தமிழில் அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜியுடன் எல்.கே.ஜி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். பெரும்பாலும் நடுத்தர ஹீரோக்களுடன் ஜோடி போட்டுவந்த அவர் முன்னணி நாயகர்கர்களுடன் நடிப்பது குறித்து பேசியபோது.... "நான் எதையும் எதிர்பார்த்ததும் கிடையாது. அதற்காக வருத்தப்பட்டதும் கிடையாது. என்னோட பாதை வேறு, ஆர்வம் வேறு. நான் எப்போதுமே படங்களின் எண்ணிக்கை சம்பளத்துக்காக மட்டும் நடித்ததில்லை. சினிமாவை நேசித்துதான் சினிமாவுக்குள் வந்தேன். எனக்குப் பல மொழிகள் தெரியும். மொழி எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. எந்த மொழி படமாக  இருந்தாலும் அது என் மனதுக்குப் பிடிக்கவேண்டும். எனக்கு அதில் முக்கியத்துவம் இருக்கவேண்டும். அதனால் ஒரு வருடத்துக்கு ஒரு மொழியில் என் ஒரு சில படங்கள்தான் வெளியாகிறதே என்று நான் ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. நடிப்பைத் தாண்டி எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளமாட்டேன்" என்றார்.