Advertisment

இரண்டாவது முறையாக மோகன்லாலை இயக்கும் பிரித்விராஜ்!

mohanlal

Advertisment

மலையாள நடிகரான பிரித்வி ராஜ், இயக்குநராகவும் செயல்பட்டுவருகிறார். அவரது இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் உருவான ‘லூசிபர்’ திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பிரித்விராஜ் - மோகன்லால் கூட்டணியில் ‘லூசிப’ர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரித்வி ராஜ் - மோகன்லால் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இக்கூட்டணியில் உருவாகும் படத்திற்கு 'ப்ரோ டாடி' (Bro Daddy) எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த குடும்பப் பின்னணியில் உருவாகவுள்ளது. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், மீனா, கனிகா, முரளி கோபி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

mohanlal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe