Skip to main content

பிரித்விராஜ் பட விவகாரம்; "எங்கள் தலைவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை" - விஸ்வ இந்து பரிஷத் விளக்கம்

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

prithviraj movie issue Vishwa Hindu Parishad organisation explained

 

பிரித்விராஜ் நடிப்பில் 'கோல்ட்', 'காப்பா' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து கடந்த மாதம் வெளியான நிலையில் தற்போது 'ஆடு ஜீவிதம்', 'விலயாத் புத்தா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே 'ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பை புத்தாண்டு தினத்தன்று பிரிதிவிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். 

 

மேலும் படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இப்படத்தை 'இ4 என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்க தீபா பிரதீப் வசனம் எழுதுகிறார். இப்படத்தின் தலைப்புக்கு கேரள மாநில விஸ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் பிரதீஷ் விஸ்வநாத், "குருவாயூரப்பன் பெயரில் எடுக்கவுள்ள இப்படம் அவரைக் கேலி செய்யும் வகையில் இருந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" எனக் கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளம் வாயிலாக மிரட்டல் விடுத்திருந்தார். 

 

இந்த நிலையில் மிரட்டல் விடுத்த பிரதீஷ் விஸ்வநாத், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது என மாநிலத் தலைவர் விஜி தம்பியும், பொதுச் செயலர் ராஜசேகரனும் தெரிவித்துள்ளனர்.  மேலும், "விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் ஒரு திரைப்படம் உருவாவதற்கு முன்பே தீர்ப்பு வழங்கும் அளவுக்கு முட்டாள்கள் இல்லை. படம் வெளியான பிறகு எங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் நாங்கள் அதை தெளிவுபடுத்துவோம். எனவே இப்போது வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும் எங்கள் அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தயவு செய்து இந்த சர்ச்சையில் எங்கள் அமைப்பைத் தேவையில்லாமல் இழுக்காதீர்கள்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பிரேமலு’ படத்தைப் பாராட்டிய முன்னணி தமிழ் நடிகர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The leading Tamil actor praised the film 'Premalu'

சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இதில், ‘பிரேமலு’ திரைப்படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கியிருந்தார்.  நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் ‘பிரேமலு’ படம் இடம்பெற்றுள்ளது.

The leading Tamil actor praised the film 'Premalu'

இந்த நிலையில், ‘பிரேமலு’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக ‘பிரேமலு’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணியின் லூசிஃபர் 2; புது அப்டேட் வெளியீடு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

lucifer 2 shooting starts update

 

மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் சிரஞ்சீவி நடிப்பில் 'காட்ஃபாதர்' என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. 

 

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகக் கடந்த ஆகஸ்டில் அறிவிப்பு வெளியானது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்க முரளி கோபி கதை எழுதுகிறார். 'எம்புரான்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ப்ரித்விராஜ் இயக்குகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். 

 

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகப் படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. மேலும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருடன் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக மலையாளத் திரையுலகில் காலடி வைக்கிறார் தயாரிப்பார் சுபாஸ்கரன். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.