மணிரத்னத்தின் 'உயிரே' படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ப்ரீத்தி ஜிந்தா, தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்பு 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு நடிப்பதை குறைத்து வந்தார். இதனிடையே ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
இதற்காக தற்போது இந்தியா வந்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா. இப்போட்டியில் 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் நடந்த 2 சம்பவங்கள் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கூறியதாவது. ‘ஒருமுறை எனது மகள் கார்டன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு உயரடுக்கு கட்டடத்தில் வசிக்கும் பெண்மணி, ஃபோட்டோ எடுக்க முயன்றார். ஆனால், வேண்டாம் என்று நாங்கள் பணிவாக கேட்டபோது, திடீரென்று அந்தப் பெண்மணி எனது மகள் ஜியாவின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடி சென்றார். அப்போது நான் மட்டும் பிரபலமாக இல்லாவிட்டால் மோசமாக நடந்து கொண்டிருப்பேன்.
இன்னொரு சம்பவம், மாற்றுத்திறனாளியைப் பார்த்து கையசைத்து விட்டு காரில் ஏறி செல்ல முயன்றேன். அவருக்கு காசு எதுவும் கொடுக்காததால் அவரது சக்கர நாற்காலியின் மூலம் தனது காரை பின் தொடர்ந்து காரின் கதவை தட்டி பணம் கேட்டார். அப்போது என்னிடம் பணம் இல்லாததால் என்னுடன் காரில் இருந்த பெண் ஒருவர் அவருக்கு பணம் கொடுத்தார். ஆனால் அது போதாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடந்து தொந்தரவு செய்தார்.’ எனப் பகிர்ந்துள்ளார்.
பிரீத்தி ஜிந்தாவின் இந்த பதிவுக்கு ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, மலாய்க்கா அரோரா, உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.