நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிப்பில் ரீஎண்ட்ரி கொடுத்த பிரபுதேவாவிற்கு இரண்டாவது ரவுண்டு திருப்திகரமாகவே உள்ளது. இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான தேவி, குலேபகாவலி, மெர்குரி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளன. மேலும் இவர் நடிப்பில் 'யங் மங் சங்', 'லக்ஷ்மி' உள்ளிட்ட படங்கள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கின்ற நிலையில் தற்போது இவர் 'சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து பிரபுதேவா ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'தபாங்' படத்தின் மூன்றாம் பாகத்தை சல்மான் கானை வைத்து இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படி நடிப்பு, இயக்கம் என இன்னும் பிசியாக இருக்கும் பிரபுதேவா அடுத்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏ.சி.முகில் இயக்கும் இப்படத்தை ஜெபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார். மேலும் முதல்முறையாக பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக இதில் நடிக்க இருக்கிறார் என்பதை நேமிசந்த் ஜெபக் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லத்தியால் அடிக்கப்போகும் பிரபுதேவா...
சார்ந்த செய்திகள்
Next Story
கான் நடிகரை அடித்தால் 2 லட்சம் பரிசு - இந்து அமைப்பு அறிவிப்பு
சர்ச்சைகளுக்கு பேர் போன பாலிவுட் நடிகர் சல்மான் கான் தயாரிப்பில் 'லவ்ராத்ரி' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படம் அக்டோபர் மாதத்தில் வரும் நவராத்திரி பண்டிகையையொட்டி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ஆக்ராவில் உள்ள ஹிந்து அமைப்பு சார்பாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் இதுகுறித்து ஹிந்து ஹி ஆகேவின் ஆக்ரா நகர தலைவர் கோவிந்த் பராஷர் பேசுகையில்.... "இந்துக்களால் கொண்டாடப்படும், நவராத்திரி பண்டிகையை இழிவு செய்யும் வகையில், 'லவ்ராத்ரி' என சல்மான் கான் தான் தயாரிக்கும் படத்திற்கு பெயரிட்டுள்ளார். மேலும் 'லவ்ராத்ரி' படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இந்த படம் திரையிடப்பட்டால் போராட்டங்கள் நடத்துவோம். 'லவ்ராத்ரி' படத்தை திரையிடும் தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம். இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட சல்மான் கானை அடித்து உதைப்பருக்கு ரூ.2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்" என கூறியுள்ளார்.
Next Story
தமிழுக்கு ரஜினி, ஹிந்திக்கு இவர்! சிலாகிக்கும் பிரபுதேவா...
நடன புயல் பிரபுதேவா அடுத்ததாக ஹிந்தி படம் ஒன்றை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஹிந்தியில் வான்டட், ரவுடி ராதோர், ராமையா வஸ்தாவய்யா, ஆர் ராஜ்குமார், ஆக்சன் ஜாக்சன், சிங் ஐஸ் ப்லிங்க் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் வான்டட் படத்தில் நடிகர் சல்மான் கானை இயக்கியிருந்தார் பிரபுதேவா. இந்நிலையில் இவர் தற்போது ஹிந்தியில் மீண்டும் சல்மான் கான் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பிரபுதேவா பேசுகையில்...."சல்மான்கானுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு பிடிக்கும். முதலில் நாங்கள் வேலை பார்த்த போது அவ்வளவாக பேசியது இல்லை. பின்னர் பேசினோம், நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். திரை உலகில் சல்மான்கான் போல உண்மையாக இருப்பவர்களை பார்ப்பது அரிது. திரை உலகில் உள்ள பலரைப்போல அவர் உண்மையில் நடிக்க தெரியாதவர். சல்மான்கான் அன்பானவர். அவர் கடின உழைப்பாளி. அவர் பல விஷயத்தில் ரஜினி சார் போன்றவர். இருவருக்கும் தனி ஸ்டைல் உள்ளது. அது அனைவருக்கும் பிடிக்கும். சல்மான்கான் யாரையும் கவர வேண்டும் என்று முயற்சி செய்யமாட்டார். ஆனால் பார்ப்பவர்களுக்கு அவரைப்பிடித்து போகும். இப்போது அவரை வைத்து ‘தபாங்3’ பெரிய படம் இயக்குகிறேன்" என்றார்.