Skip to main content

அவர் என்ன தப்பா சொன்னாரு? - நயன்தாரா பற்றிய ராதாரவியின் பேச்சு குறித்து பிரவீன்காந்த் சர்ச்சைக் கருத்து 

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

சமீபத்தில் நயன்தாரா நடித்திருக்கும் கொலையுதிர்காலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகர் ராதாரவி பெண்களைப் பற்றியும், நயன்தாரா பற்றியும் இழிவாக பேசியதாக சர்சைகள் எழுந்தன. தொடந்து பல தரப்பினர் அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், பிரபல திரப்பட இயக்குனருமான பிரவின்காந்திடம் இந்த சர்சைக்குறித்துப் பேசினோம். அப்போது அவர்...

 

praveenkanth Radharavi's speech on Nayantara

 

“ராதாரவிக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு. பத்திரிக்கையாளர்களே அவர் எப்போ பேசுவாருனு எதிர்ப்பார்க்கிற அளவுக்கு ராதாரவி நகைச்சுவையாக பேசக்கூடியவர். ரசிகர்கள் கைத்தட்டினாலே நம்மை மீறி சில விஷயங்களைப் பேசிவிடுவோம், அப்படித்தான் ராதாரவியும் பேசினார். அவர் என்ன தப்பா சொன்னாரு? சாமியாகவும் நடிக்கிறார், யோகக்கார நடிகை, என்றெல்லாம் பாசிட்டிவாகதானேப் பேசினார் என்றுப் பார்க்கும்போடு அங்கேயும் இங்கேயுமாக பேசிய வார்த்தைகளை சேர்த்துப் பார்க்கும்போது அது தவறாக தெரிகிறது. அவர் எப்போதும் குசும்பாக பேசுவார் ஒழிய நயன்தாராவை தவறாக பேசவேண்டும் என்றோ, அவரைக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலோ அவர் பேசவில்லை. அவர் பேசியது சரி என்று சொல்லவில்லை, அது அவரின் ஸ்டைல். இதுவரை அந்த ஸ்டைலை எல்லோரும் பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டோம். இப்போது ஐரா படக்குழு அதன் விளம்பரத்திற்காக இதை பெரிதாக்கியிருக்கலாம்” என்றார். 
 

தொடர்ந்து பேசிய அவர் திமுக ராதாரவியை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது குறித்து “தேர்தல் நடக்கவில்லையென்றால் ராதாரவி திமுக-விலிருந்து நீக்கப்பட்டிருக்கமாட்டார். தேர்தல் நேரத்தில் நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காகத்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏனென்றால் நானும் அந்த மேடையில் தான் இருந்தேன், 90 எம்.எல் படத்தைப் பற்றித்தான் அவர் அதிகமாகப் பேசினார். அந்தப் படத்திற்கு கேட்க ஆள் இல்லை, அதனால் சாதாரணமாக போச்சு. இவர்களுக்கு அந்த பரபரப்புத் தேவைப்படுகிறது, அதனால் பெரிதாக பேசுகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.  
 

மேலும், ராதாரவி பேசிய விஷயங்களை தெளிவுபடுத்தும் விதமாக  “நயன்தாரா சீதையாகவும் நடிக்கிறார், பேய் வேடத்திலும் நடிக்கிறார், எல்லாவேடத்திற்கும் அவர் பொருந்துகிறார். அந்த காலத்தில் கே.ஆர் விஜயாவை மட்டும் சாமி வேஷம் போடுவதற்கு கூப்பிடுவாங்க, இப்போ சாமி வேஷத்திற்கு யாரைவேண்டுமானாலும் கூப்பிடுறாங்க. கையெடுத்து கும்பிடுகிற மாதிரி சில பெண்கள் இருப்பாங்க, கைத்தட்டி கூப்பிடுகிற மாதிரி சில பெண்கள் இருப்பாங்க என்று தான் அவர் பேசினார். கைத்தட்டி கூப்பிடுவது கையெடுத்து கும்பிடுவது என்ற வார்த்தைகள் காலங்காலமாக நடைமுறையில் இருக்கிற வார்த்தைகள் தான். ராதாரவி அதை புதிதாக சொல்லவில்லை. கீழே இருக்கிறவர்கள் கைத்தட்டும்போது அவருக்கு குஷியாகிவிட்டது. எல்லோரும் அவர் பேச்சை ரசித்தார்கள். அதனால் அவரும் ஃப்ளோவாக பேசிவிட்டார். அதையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்த்தால் அது தவறாக தெரிகிற” என்று கூறினார்.  
 

“சில நேரங்களில் சில விஷயங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படும். அதைப் ராதாரவி உணர்கிறார் பிறகு மன்னிப்பும் கேட்டுவிட்டார். நானும் அந்த மேடையில் தான் இருந்தேன். ராதாரவி பொதுவாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், வெவ்வேறு வார்த்தைகளை சேர்ட்துப் பார்க்கும்போது அவர் பெண்களை இழிவாக பேசிவிட்டார், நயன்தாராவை தவறாக பேசிவிட்டார் என்பது போல புரிந்துகொள்ளப் பட்டது. உங்களுக்கு அது தவறாக படுகிறதா? அப்படியெனில் மன்னித்துவிடுங்கள் என்ற வகையில் தான் அவர் மன்னிப்புக் கேட்டார்” என்றும் இயக்குனர் பிரவீன்காந்த் தெரிவித்தார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் பேசும்போது நீ குறுக்கப் பேசாத” - மேடையில் கோபப்பட்ட ராதாரவி!

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

 "You don't interrupt when I'm talking" - Radharavi angry on stage

 

இளையராஜா இசையில் டி.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீஇராமானுஜர். ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீஇராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் டி.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி கூறுகையில், “இங்கு ஆத்திகம், நாத்திகம் என்று வெவ்வேறு கருத்துகள் பேசப்படுகிறது. அப்படியெல்லாம் பேசக்கூடாது. ஏனென்றால் ஆத்திகம் இல்லாமல் நாத்திகம் கிடையாது. நாத்திகம் இல்லாமல் ஆத்திகம் கிடையாது. அந்த காலத்திலேயே சீர்திருத்தக் கருத்துகளைப் பேசி எல்லோரையும் சமமாக நினைத்தவர்தான் இராமானுஜர். 

 

சீர்திருத்தவாதியாக நடிப்பது மிகவும் கஷ்டமானது. ஒருமுறை எனது தயாரிப்பில் கமல்ஹாசனை நடிக்க வைப்பதற்காக அவரது கால்ஷீட் கேட்டு அவரை சந்திக்கச் சென்றேன். நானும் கமலும் அப்போது நல்ல நண்பர்கள். "உன்னை வச்சு ஒரு படம் எடுக்கணும்" என்று அவரிடம் கேட்டபோது, “இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் படம் ரிலீஸ் ஆகட்டும். அப்புறம் பார்க்கலாம்" என்றவர், "நான் குளத்தில் போட்ட ஆமை மாதிரி வாயை திறந்துகொண்டே இருக்கணும். எப்போ குருவி விழுதோ அப்போ வாயை டக்குன்னு மூடிக் கொள்ளனும்" என்றார். கமல் ஏன் அப்படி சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் பெரிய அறிவாளி. இன்றைக்கு சினிமாவில் நடிகர் திலகம் இல்லையென்றாலும் கமல்ஹாசன் இருக்கிறார் என்று திருப்திப்பட்டுக்கொள்ளலாம். 

 

நான் சொல்லித்தான் இதில் அவர் நடித்தார் என ஒய்.ஜி சொன்னார். அப்படியெல்லாம் யாரையும் திரி போல தூண்டிவிட முடியாது என்று ராதாரவி பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் உட்கார்ந்திருந்த ஒய்.ஜி.மகேந்திரன் குறுக்கிட்டார். அதற்கு நான் பேசும் போது நீ குறுக்கப் பேசாத என்றார் ராதாரவி. பேசுவதை ஒழுங்கா பேசு என்றார் ஒய்.ஜி.மகேந்திரன். இது லேசான சலசலப்பை ஏற்படுத்தியது. 

 


 

Next Story

விஜயகாந்திற்காக கடவுளின் மீது கோபம்; ரஜினிக்கு அப்புறம் விஜய் தான் - ராதாரவி பளிச் பதில்

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Radharavi interview about tamil cinema heroes

 

சினிமா வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ராதாரவி

 

என் தந்தை எம்.ஆர்.ராதா எப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உள்வாங்கி அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார் என்று அடிக்கடி வியந்திருக்கிறேன். பிறவிக் கலைஞன் அவர். நாடகம் மூலமாக நடிகராக அவர் மாறினாலும் எலக்ட்ரிக் வேலைகள் உட்பட பல விஷயங்கள் அவருக்குத் தெரியும். பெரியாரை சந்திப்பதற்கு முன்பே புரட்சிகரமான சிந்தனைகள் அவருக்குள் தோன்றின. இப்போது நடக்கும் விஷயங்களை அப்போதே அவர் சொல்லியிருக்கிறார். படிப்பறிவும் இல்லாமல் எப்படி இவை அனைத்தையும் சாதித்தார் என்பது எனக்கு இன்றும் ஆச்சரியம்.

 

'பிசாசு' படத்தில் நான் செய்த கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த கிரியேட்டிவிட்டி தான் நான் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது. விஜயகாந்த் சார் மாதிரி ஒரு நல்ல மனிதரைப் பார்க்க முடியாது. எப்போதும் தர்மம் செய்துகொண்டே இருப்பார். கடவுள் பக்தி அதிகமுள்ள எனக்குக் கடவுள் மேல் கோபம் வருவதற்கு விஜயகாந்தின் தற்போதைய உடல்நிலையும் ஒரு காரணம். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை வெளிப்படுத்திக்கொள்ளத் தயங்கவே மாட்டார். அவருடைய மனைவி அவரை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்.

 

கமல் சாருடன் ஏன் நான் அதிகம் நடிக்கவில்லை என்பது தெரியவில்லை. அவரிடம் தான் கேட்க வேண்டும். அதேபோல் அஜீத்துடன் சில படங்கள்தான் நடித்திருக்கிறேன். அதன் பிறகு ஏன் அவர் என்னைக் கூப்பிடவில்லை என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். 5000-க்கும் அதிகமான ஆபரேஷன்களுக்கு அஜீத் சார் நிதியுதவி செய்திருக்கிறார். அவர் மீதான மரியாதை எனக்கு அதிகரித்ததற்கு அதுதான் காரணம். 

 

ஆரம்பத்தில் நான் பார்த்த விஜய்க்கும் சர்க்கார் படத்தில் நான் பார்த்த விஜய்க்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. 'நாளைய தீர்ப்பு' படத்தின்போது அவர் அவ்வளவு பயப்படுவார். பலமுறை நான் அவரைத் தேற்றியிருக்கிறேன். அதன் பிறகு அவர் அடைந்த வளர்ச்சி பெரிய அளவில் இருக்கிறது. "எம்ஜிஆரை சுட்ட நிகழ்வு நிகழ்ந்த அன்று மாலை உங்கள் வீட்டின் நிலை எப்படி இருந்தது?" என்று ஒருமுறை என்னிடம் தனியாகக் கேட்டார். நான் பிரமித்துப் போனேன். அவருடைய உழைப்பால் தான் ரஜினி சாருக்கு அடுத்தது விஜய் தான் என்கிற நிலையில் இன்று இருக்கிறார்.