Skip to main content

"இன்னைக்கு நிறைய பேர் பிரம்மாண்டம்னு சொல்லலாம், கொண்டாடலாம், ஆனால்..." - பிரசாந்த் பேச்சு 

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

prashanth talk about rk selvamani

 

கடந்த 2018 ஆம்  இந்தியில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த ‘அந்தாதூண்' படத்தின் தமிழில் ரீமேக்கில் பிரசாந்த் நடித்து வருகிறார். தமிழில் அந்தகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரஷாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் பிரசாந்த் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில்  பிரசாந்த், அவரது தந்தை தியாகராஜன், உள்ளிட்ட அந்தகன் படக்குழுவினருடன் இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

 

இவ்விழாவில் பேசிய பிரசாந்த், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி, 2 வருஷமாச்சு இப்படி பிறந்தநாள் கொண்டாடி. அந்தகன் படம் ரொம்ப நல்ல வந்திருக்கு. படம் பார்த்தவர்கள் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருக்குன்னு சொல்றாங்க ஆர்.கே செல்வமணி சார் எப்போதும் சிரிச்சுகிட்டே இருப்பாரு. அவருக்கு கோவமே வராது, அப்படி வந்த செட்ல எல்லாரும் அடங்கி போயிடுவோம். தமிழ் சினிமால எல்லாரும் பிரம்மாண்டம், பிரம்மாண்டம்னு சொல்லிட்டு இருக்கோம். அந்த பிரம்மாண்டம் 90 களில் எங்களுக்கு ஒரு பெரிய சகாப்தம். ஒரு பாடலுக்கு 500 நடன கலைஞர்களை வைத்து பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி  வெளியிட்ட முதல் இயக்குநர் ஆர்.கே செல்வமணி சார்தான்.

 

இன்னைக்கு நிறைய பேர் பிரம்மாண்டம்னு சொல்லலாம், கொண்டாடலாம். ஆனால் அதை முதலில் கொண்டாடுவது ஆர்.கே செல்வமணி சார்தான். அவர் தான் சினிமாவின் பரிணாமத்தை மாற்றியவர். சினிமாவை இப்படியும் எடுக்க முடியும், இவ்வளவு பெருசா பண்ண முடியும்னு சாதித்து காட்டினார். நிறைய விஷயம் எனக்கு தெரியும்னு சொன்னாங்க. ஆனால் அதற்கு காரணம் என தந்தையும், ஆர்.கே செல்வமணி சார் மட்டும்தான். அவங்ககிட்ட இருந்துதான் நான் எல்லாம் கத்துக்கிட்டேன்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் பிரஷாந்த் திடீர் சந்திப்பு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
prashanth meets thirumavalavan

பிரஷாந்த், தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும்  ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்தகன் படத்தை கைவசம் வைத்துள்ளார். நீண்ட காலமாக உருவாகி வரும் படம் விரைவில் வெளியிடவுள்ளதாக சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். 

சமீப காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அன்மையில் கூட நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.

இந்த நிலையில், பிரஷாந்த் தனது தந்தை தியாகராஜனுடன் இணைந்து விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி-யை சந்தித்துள்ளார். 

Next Story

“அதுக்கு நிறைய தைரியம் வேண்டும்” - விஜய் குறித்து பிரசாந்த்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
prashanth about vijay

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரசாந்த் கலந்து கொண்டார். அதில் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அவர் பேசுகையில், “தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பார்கள். என்னை பொறுத்தவரை அது உயிரைத் தாண்டி ஒரு குடும்பத்தை காக்கும் கவசம். இன்றைக்கு நடக்கும் நிறைய விபத்துகளில் உயிர் பலியாவது தலைக்கவசம் அணியாதது தான் காரணம் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதனால் மக்களுக்கு தலைக்கவசம் வழங்கி வருகிறேன். அதன் மூலம் ஒருத்தர் உயிர் காப்பாற்றப்பட்டாலும் எனக்கு பெருமைதான்” என்றார்.  

அடுத்தடுத்த படங்கள் குறித்துப் பேசிய அவர், “அந்தணன் படம் முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸாகும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய் சாருடன் சேர்ந்து ஒரு படம் நடிச்சிட்டு இருக்கேன். இன்னும் இரண்டு மூன்று புது ப்ராஜெக்ட் வந்திருக்கு. அதிலும் நடிக்க போறேன். விஜய்யுடன் நடிக்கும் படம் சூப்பரா போயிட்டு இருக்கு. உங்க எதிர்பார்ப்புக்கு மேல் அந்த படம் இருக்கும்” என்றார். 

மேலும், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய அவர், “விஜய்யை என்னுடைய சகோதரர் என்று கூட சொல்லலாம். மக்களுக்கு சேவை செய்யும் பணி உண்மையிலே உழைப்பும், கடமைகளும் நிறைந்தது. அது விஜய் சார்கிட்ட இருக்கு. அதை நான் வாழ்த்துகிறேன்.  எனக்கு அது ரொம்ப கஷ்டம். அதுக்கு நிறைய தைரியம் வேண்டும். அவர் இறங்கியிருக்கிறார், வாழ்த்துகள்” என்றார்.