Skip to main content

'அஜித்துடன் என்றால் அப்படி நடிக்க ஆசை' - பிரசன்னா !

Published on 02/04/2020 | Edited on 02/04/2020


இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. 

 

hrh

 

இதனால் சினிமா தொழிலாளர்களும் வேலை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் திரையுலகினர் பலர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வரும் நிலையில் நடிகர் பிரசன்னா அஜித், விஜய்யுடன் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில்...''அஜித்தை எனக்கு நிறையப் பிடித்தாலும் அதே அளவு அவருக்கு வில்லனாகவும் நடிக்க விருப்பம். அதேபோல் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்தத் திகைப்பு வானளவு இருக்கும்'' எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரசன்னா ட்வீட்டுக்கு விளக்கம் அளித்த மின்சார வாரியம்! 

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

tdhd


கரோனாவால் திரையுலகமும் முடங்கியுள்ளதால் திரையுலகினர் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் மற்ற திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பிரசன்னா மின்சார வாரியம் குறித்து சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில்... ''இந்தக் கோவிட் லாக்டவுனுக்கு மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கொள்ளையடிக்கும் செயலில் உற்சாகமாக ஈடுபட்டிருப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..?'' எனப் பதிவிட்டுள்ளார். இதற்குப் பலரும் பதில் அளித்து வருகின்ற நிலையில் இந்த ட்வீட்டுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்...
 


"தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்தை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மின் நுகர்வோர் மற்றும் ஊழியரின் பாதுகாப்புக் காரணம் கருதி, மின் கணக்கெடுப்பு எடுக்க முடியாத நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படாமல் முந்தைய மாதம் மின்நுகர்வோர் செலுத்திய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு வசூல் செய்யப்படும் தொகை அடுத்து வரும் மாதக் கணக்கெடுப்புத் தொகையில் சரிசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் ஊரடங்கு காலக் கட்டத்தில் வீட்டு மின்நுகர்வு அதிகரித்துள்ளதால் மின் கணக்கெடுப்பு நடத்தும் பொழுது அதிக கட்டணம் வரும் நிலையில் மின்வாரியம் முந்தைய மாதக் கட்டணத்தை மட்டுமே கழித்து யூனிட்டைக் கழிப்பதில்லை என்று ஊடகங்களில் வரும் செய்தி தவறானதாகும். மேலும் நடிகர் பிரசன்னா மின்வாரியம், ஊரடங்கு காலகட்டம் நிறைவடைந்த பின்பு மின் கணக்கெடுப்பு என்ற முறையில் கொள்ளை அடிப்பதாகத் தவறான செய்தியை வெளியிட்டுள்ளார். இந்தக் கணக்கெடுப்பு முறையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படுவதால் நடிகர் பிரசன்னா தமிழ்நாடு மின்சார வாரியத்தைக் கடும் சொற்களால் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.
 

 


பிரசன்னா வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்பு எண்.328-010-60 மற்றும் 328-010-61. இந்த மின் இணைப்பு எண்.328-010-60-ஐ கணக்கீடு செய்ததில் ஜனவரி மாதம் யூனிட் 2,280 மின் நுகர்வுக்கு ரூ.13,528/-ஐ செலுத்தியுள்ளார். மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிப்பால் கணக்கீடு செய்ய முடியாத நிலையில் முந்தைய மாதக் கட்டணமான ரூ.13,528/- நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தக் கட்டணம் இதுவரை மின்வாரியத்திற்குச் செலுத்தப்படவில்லை. மேற்கண்ட மின் இணைப்பில் மே மாதம் நான்கு மாதங்களுக்கான மொத்த நுகர்வு 6,920 யூனிட் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 6,920 யூனிட்டை மொத்தமாகக் கணக்கிட்டால் இதற்கான கட்டணம் ரூ.44,152/- ஆகும். ஆனால் செய்திக் குறிப்பில் கூறியுள்ளபடி 6,920 யூனிட்டானது இரண்டு மாத மின் கணக்கெடுப்பு அடிப்படையில் இரு இரண்டு மாத நுகர்வாகப் பிரிக்கப்பட்டு 3,460 யூனிட், வீதப்பட்டியலின்படி (Tariff Salab) மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது.

3,460 யூனிட்டுக்கான மின் கட்டணம் ரூ.21,316/- ஆகும். ஆக இரண்டு 3,460 யூனிட்டுக்கான மின் கட்டணம் ரூ.42,632/- ஆகும். இவற்றில் முந்தைய மாதக் கட்டணம் ரூ.13,528/- கழிக்கப்பட்ட பின் ரூ.29,104/- மட்டுமே மே மாதக் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் நடிகர் பிரசன்னா முந்தைய மாதக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.13,528/-ஐ செலுத்தாத காரணத்தினால் அவர் மொத்தமாகச் செலுத்த வேண்டிய தொகை ரூ.42,632/- ஆக உள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான நடைமுறை கணக்கெடுப்பு முறையில்தான் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
 

http://onelink.to/nknapp


ஆகவே மின்சார வாரியத்தால் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் பொழுது, நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு அதற்கான வீதப்பட்டியலில் (Bi-monthly Slab) மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, முந்தைய மாதக் கட்டணம் கழிக்கப்பட்டபின் மின் கட்டண தொகை கணக்கிடப்படுகிறது. இதைக் கருத்தில் கொள்ளாமல், முந்தைய மாத யூனிட்டைக் கழிக்காமல் தொகையை மட்டுமே கழிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும். பொதுமக்கள் தங்களது கணக்கீட்டு முறையில் சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். மற்றும் கணக்கீடு செய்யப்படும் முறை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணையத்தளத்திலும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

 


 

Next Story

''கடவுளே! அவர்கள் நம்பமுடியாதவர்கள்'' - பிரசன்னா கேள்விக்குப் பதிலளித்த விஜயலக்ஷ்மி!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

ngcgc


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் கோடைக்காலம் காரணமாகவும், கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் வீட்டிலேயே அடங்கியிருப்பதால் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது. 
 


இதற்கிடையே கரோனாவால் திரையுலகமும் முடங்கியுள்ளதால் திரையுலகினர் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் மற்ற திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடிகர் பிரசன்னா, ''இந்தக் கோவிட் லாக்டவுனுக்கு மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கொள்ளையடிக்கும் செயலில் உற்சாகமாக ஈடுபட்டிருப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..?'' என மின்சார வாரியம் குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். 

இதற்குப் பலரும் பதில் அளித்து வரும் நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி இதற்குப் பதில் ட்வீட் செய்துள்ளார். அதில்.. ''கடவுளே! அவர்கள் நம்பமுடியாதவர்கள். அவர்கள் கடந்த இரண்டு தடவை எங்கள் பில் தொகையை இரட்டிப்பாக்கி, தற்போது அதைச் செலுத்தச் சொன்னார்கள். எங்களுக்கு வேறு வழியில்லை. ஏனெனில் அது தமிழ்நாடு மின்சார வாரியம். அங்குப் பதில் சொல்லக் கூட யாரும் இல்லை'' எனப் பதிவிட்டுள்ளார்.