Skip to main content

'காலா' பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் இருப்பது தான் சரி - பிரகாஷ்ராஜ்

Published on 06/06/2018 | Edited on 07/06/2018
prakash raj


சமீபத்தில் காவிரி பிரச்னை குறித்து பேச கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமியை சந்தித்து பேசினார் கமல்ஹாசன். அந்த சமயத்தில் கமல் 'காலாவை விட காவிரி தான் முக்கியம்' என்றார். இதற்கு பல்வேறு தரப்பிலுருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இதற்கு கண்டனம் தெரிவித்து பேசியபோது... "கர்நாடக முதல்வரிடம் காலா படம் குறித்து கமல்ஹாசன் பேசாதது தவறு. 'விஸ்வரூபம்' படத்துக்கு பிரச்சினை ஏற்பட்ட போது அதை கமல்ஹாசன் பெரிதுபடுத்தினார். உலகமே அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பது போல அவரது பேச்சுக்கள் இருந்தன. ஆனால் காலா படத்துக்கு இப்போது அவர் குரல் கொடுக்காமல் இருக்கிறார். நான் காலா படத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன். எல்லா படங்களுக்காகவும் பேசுவது எனது கடமை. கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். சமூக விரோதிகளின் செயலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. படத்தை வெளியிடக்கூடாது என்று தடுப்பது தவறு. பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் இருப்பது தான் சரி" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

'அந்த குடிகாரனை வெட்டி எறிந்துவிட்டேன்' - பிரபல நடிகை புலம்பல் 

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

பிக்பாஸ் மற்றும் நாகினி தொடரில் நடித்து பிரபலமான ஹிந்தி நடிகை ஸ்வேதா திவாரி முதல் கணவர் ராஜா சவுத்திரியை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன் இரண்டாவது கணவருடனும் தற்போது ஸ்வேதாவிற்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

 

sweta tiwari

 

 

அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் அவரை கைது செய்த நிலையில் நடிகை ஸ்வேதா திவாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது... ''கணவரை பிரிந்த பிறகு தற்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு குடிகார விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த குடிகார விஷக்கிருமி என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. இப்போது குடிகார விஷக்கிருமியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிந்து விட்டேன். பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படக்கூடாது'' என்றார்.