Skip to main content

“ப்ளூ ஜே.பி...” - சட்டப் பேரவையில் ஆபாசப் படம் பார்த்த பா.ஜ.க எம்எல்ஏ குறித்து பிரபல நடிகர்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

prakash raj about BJP MLA Jadab Lal Nath watching obscene reels in  Tripura assembly session

 

திரிபுரா மாநில சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது கூட்டத்தின் நடுவே பாக்பாசா தொகுதி பா.ஜ.கவை சேர்ந்த எம்.எல்.ஏ ஜாதப் லால் நாத் தனது டேப்லெட்டில் ஆபாசப் படம் பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஜதாப் லால் நாத், 2018ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சட்டப்பேரவையில் ஒரு எம்.எல்.ஏ ஆபாசப்படம் பார்த்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் அரசியல் விமர்சகருமான பிரகாஷ் ராஜ், பா.ஜ.க எம்.எல்.ஏ ஆபாசப் படம் பார்த்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "ப்ளூ ஜே.பி... அசிங்கம்" எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் ஆபாசப் படம் பார்த்து சிக்கியுள்ளனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டக்காரர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரகாஷ் ராஜ்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
prakash raj celebrate his birthday with sonam wangchuk protest

பிரகாஷ் ராஜ் கடைசியாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது தனுஷின் ராயன், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா உள்ளிட்ட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். 

தமிழ், மலையாலம், கன்னடம், இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் 5 முறை தேசிய விருது வென்றுள்ளார். நடிப்பதை தாண்டி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். திரைப்படங்களைத் தாண்டி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார். மேலும் பா.ஜ.க-வை தீவிரமாக எதிர்த்து வருகிறார்.  

prakash raj celebrate his birthday with sonam wangchuk protest

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் பிரகாஷ் ராஜ். அவருக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும் அரசியல் சாசனத்தில் ஆறாவது அட்டவணையை அமல்படுத்தக்கோரியும் பொறியியலாளர் மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமக்காக, நம் நாட்டிற்காக, நமது சுற்றுச்சூழலுக்காக, நமது எதிர்காலத்திற்காக போராடும் லடாக் மக்களுடன் துணை நிற்போம். சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது பிறந்தநாளைக் கொண்டாடினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“அதற்கு பெயர் ஆணவம்” - பிரகாஷ் ராஜ் கடும் விமர்சனம்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
prakash raj about 2024 election Presumably bjp

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

அந்த வகையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறவுள்ளதாக பிரதமர் மோடி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜ.க. பெயரை குறிப்பிடாமல் 420 செய்தவர்கள் தான், 400 சீட்களைப் பற்றி பேசுவார்கள் என விமர்சித்துள்ளார். 

கர்நாடகாவில் உள்ள சிக்கமங்களூர் பிரஸ் கிளப்பில் பேசிய அவர், “420 மோசடி பேர்வழிகள் தான் 400 சீட்களைப் பற்றி பேசுவார்கள். எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, அது உங்களின் ஆணவத்தைப் பிரதிபலிக்கிறது. ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி 400 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை வெல்ல வாய்ப்பே இல்லை. மக்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே அப்படி வெல்ல முடியும். எந்த ஒரு அரசியல் கட்சியும் தாங்களாகவே முன் வந்து, இவ்வளவு தொகுதிகளில் எங்களால் வெல்ல முடியும் என சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அதற்கு பெயர் ஆணவம்” என்றார்.