ADVERTISEMENT

”உதயநிதிக்கு ரெண்டுநாளா தூக்கம் வரல; கமல் நல்லா தூங்குனார்” - இயக்குநர் பிரபுசாலமன் பேட்டி 

01:43 PM Jun 06, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

மைனா', 'கும்கி', 'கயல்' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த பிரபுசாலமன், தற்போது 'செம்பி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வின், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பிரபுசாலமனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் 'செம்பி' படம் மற்றும் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், நடிகர் கமல் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

”நடிகர் கரணை வைத்து கொக்கி படம் பண்ணேன். கரணும் கமல் சாரும் நெருங்கிய நண்பர்கள். அதனால் அந்தப் படத்தின் ஆடியோ லான்ச்-க்கு கமல் சார் வந்தார். அப்போது அவரோடு கை மட்டும்தான் குலுக்கினேன். பெரிய அளவில் அறிமுகமாகவில்லை. மைனா படம்தான் எனக்கு அவருடன் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. மைனா படஆடியோ லான்ச்-க்கு அவரை அழைத்தபோது படம் பார்த்துவிட்டுத்தான் வருவேன் என்றார். அவர் மட்டும் படம் பார்க்க ஏற்பாடு செய்தோம். தனியறையில் படம் பார்த்துவிட்டு கலங்கிய கண்களுடன் வெளியே வந்த கமல் சார், என்னிடம் அரை மணி நேரம் பேசினார். பட விழாவில் மைனா படம் பார்த்துவிட்டு நான் இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி சொன்னார். நான் நிம்மதியாக தூங்கினேன் என்று கமல் சார் சொன்னார். அதன் பிறகு அடிக்கடி என்னைப் பற்றி விசாரிப்பார்.

கமல் சாருக்கு நான் கதைகூட சொல்லியிருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் அவர் நடிப்பதாகக்கூட இருந்தது. கமர்ஷியல் காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. ஒருநாள் நிச்சயம் அது நடக்கும் என்று நம்புகிறேன்”.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT