Skip to main content

ஆக்ஷன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

Prabhu Deva

 

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. முழுநீள ஆக்க்ஷன் படமாக உருவாகவுள்ள இப்படத்தை, ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார். ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். 

 

இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்து இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் கூறுகையில், ''பிரபுதேவா நடிப்பில் மாஸான முழுநீள ஆக்க்ஷன் படமாக இப்படம் தயாராகிறது. இந்தப் படத்தின் உச்சக்கட்ட காட்சி, ரசிகர்களின் கண்களுக்குப் புதுமையானதாக இருக்கும்'' எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கூட்டணி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
ar rahman prabhu deva movie update

பிரபுதேவா தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கேரளாவில் தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் புதுப் பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ், பிரவீன் இலக் உள்ளிட்ட மூன்று பேர் இணைந்து தயாரிக்கின்றனர். பிகைண்ட்வுட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. யோகி பாபு, அஜுவர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு இசையமைக்கிறார். 

ar rahman prabhu deva movie update

ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் - பிரபு தேவா இருவரும் காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story

பிரபு தேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

prabhu deva brother issue

 

சென்னையை பூர்வீகமாக கொண்ட விக்னேஷ், 2021ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வீடு இல்லாமல், வீடு தேடி வந்துள்ளார். அப்போது தேனாம்பேட்டையில் உள்ள பிரபுதேவாவின் சகோதரரும் நடன இயக்குநர் மற்றும் நடிகரான நாகேந்திர பிரசாத்தின் வீடு காலியாக இருப்பதை பார்த்துள்ளார். இது தொடர்பாக வீட்டை லீசுக்காக கேட்க அவரை தொடர்பு கொண்டபோது நாகேந்திர பிரசாத்தின் மனைவி ஹேமா பேசியுள்ளார். அவர், எங்கள் வீட்டை எஸ்டிஎஸ்கே பிராபர்ட்டி டெக் என்ற நிறுவனத்திடம் கேர் டேக்கர் ஆக கொடுத்துள்ளதாகவும், அந்த நிறுவனத்தில் லீசுக்கான தொகை 25 லட்சம் ரூபாய் கொடுக்குமாறும், அவர்கள் நாகேந்திர பிரசாத்திற்கு மாதம் ரூபாய் 36,000 வீதம் இரண்டு வருடத்திற்கு கொடுத்து விடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து விக்னேஷ், நாகேந்திர பிரசாத் மனைவி கூறியது போல் எஸ்டிஎஸ்கே நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து லீசுக்கான தொகை 25 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, கேர்டேக்கராக செயல்பட்டு வந்த நிறுவனம் நாகேந்திர பிரசாத்திற்கு ஒரு வருடம் மட்டும் வாடகை தொகையை கொடுத்து விட்டு அதன் பிறகு நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர். 

 

இதனை தொடர்ந்து விக்னேஷ் குடும்பத்துடன் வெளியே சென்ற நேரத்தில் அவரது வீட்டிற்கு, நாகேந்திர பிரசாத்தின் ஆட்கள் வந்து வீட்டின் வெளிப்புறம் பூட்டியுள்ளனர். மேலும் பூட்டை திறக்காதவாறு வெல்டிங் வைத்து சென்றுள்ளனர். பின்பு வெளியே சென்ற விக்னேஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு பூட்டி வெல்டிங் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினருடன் வீடு இல்லாமல் தவிக்கும் நிலைமை அவருக்கு ஏற்பட்டுவிட்டது. 

 

இந்த நிலையில் விக்னேஷ், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய விக்னேஷ், எஸ்டிஎஸ்கே நிறுவனம் நாகேந்திர பிரசாத்தை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டனர். அதற்காக கடந்த ஒரு வருடமாக வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் நாகேந்திர பிரசாத் என்னை மிரட்டி வருகிறார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இன்று தனது வீட்டை பூட்டி வெல்டிங் செய்துவிட்டு சென்றுள்ளனர். குறிப்பாக தனது நாயை உள்ளே வைத்து பூட்டியுள்ளதால் உணவில்லாமல் அது தவித்து வருகிறது. எனவே உடனடியாக போலீஸார் தலையீட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் நாகேந்திர பிரசாத், விக்னேஷிக்கும், தனக்கும் எந்த தொடர்புமில்லை எனவும், தனது பெயரை கெடுக்கும் நோக்கத்தில் விக்னேஷ் செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.