பாகுபலி பிரபாஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள 'சாஹோ' படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் நடிகர் பிரபாஸ் கலந்துகொண்டு பேசும்போது...

prabhas

Advertisment

Advertisment

''பாகுபலிக்கு பிறகு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் 'சாஹோ' இயக்குனர் சுஜீத் என்னை விடவில்லை. அதுபோக இந்த படமும் என் இரண்டரை வருடங்களை எடுத்துக்கொண்டது. ஏனென்றால் இந்த படத்தின் காட்சிப்படுத்தல் அப்படி. அதற்கு இரண்டரை வருடங்கள் தேவைபட்டது. இல்லையென்றால் படம் இந்த அளவுக்கு மிக பிரமாண்டமாக வெளிவந்திருக்காது. இந்த படம் உலகம் முழுக்க உள்ள பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. அது நம் கண்களுக்கு கண்டிப்பாக விருந்து படைக்கும். எனக்கு நேரடி தமிழ் படங்கள் பண்ண ஆசை. அது கூடிய விரைவில் நடக்கும் என நம்புகிறேன். தமிழ் ரசிகர்களுக்காக வரும் வெள்ளியன்று ஆகஸ்ட் 23ஆம் தேதி ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறத" என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/p2gfuRZbeoE.jpg?itok=ogmydYGJ","video_url":" Video (Responsive, autoplaying)."]}