prabhas -prasanth kneel

தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணி நடிகரானபிரபாஸ், பாகுபலி1 மற்றும் 2 ஆம் பாகங்களின் வெற்றிக்குபிறகு இந்தியஅளவில் பெரிய நட்சத்திரமாகஉயர்ந்தார். அதனைத்தொடர்ந்து, 350 கோடிரூபாய் செலவில்உருவான, சாஹோபடத்தில் நடித்தார்.இப்படம்எதிர்பார்த்தஅளவிற்குவரவேற்பை பெறவில்லை.

Advertisment

சாஹோபடத்திற்கு அடுத்ததாக, பிரபாஸ்தற்போது 'ராதேஷ்யாம்'என்ற படத்தில்நடித்து வருகிறார். இதன்பிறகு, 'ஆதி புருஷ்'படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம்3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட இருக்கிறது. இந்தநிலையில், கன்னடம்தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி, ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 'கே.ஜி.எஃப்' படத்தின் இயக்குனர், பிரசாந்த்நீல்லோடு, பிரபாஸ்இணைவதாக, தகவல் வெளியானது.

Advertisment

இந்தநிலையில், பிரபாஸ், பிரசாந்த்நீல்லோடுஇணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும்இணையும் படத்திற்கு, 'சலார்'எனபெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரியிலிருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப்படத்தை தயாரித்த ஹொம்பாளேநிறுவனமேஇப்படத்தையும் தயாரிக்கிறது. மேலும்சாலார்படம், அனைத்திந்திய படமாகஇருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.