Skip to main content

ஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்! 

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
poonam kaur

 

 


'நெஞ்சிருக்கும்வரை' படம் மூலம் தமிழில் அறிமுகமான பூனம் கவுர் பின்னர் என் வழி தனி வழி, பயணம், வெடி, 6 மெழுகுவர்த்திகள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு நாடகங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்து நடிகை ஸ்ரீரெட்டியின் புகார் குறித்து பேசியபோது...

 

 


"சினிமாவில் இது போன்ற தொல்லைகள் நடிகைகளுக்கு இருக்கிறது. முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் என்னுடைய படங்களை பார்த்து புகழ்ந்து எனக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி அவர் அலுவலகத்தில் வந்து என்னை சந்திக்க கூறினார். இதையடுத்து எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவரின் முகம் மாறியது. என் அம்மாவுடன் அலுவலகம் வந்ததை அவர் விரும்பவில்லை. இதனால் அந்த தயாரிப்பாளர் என்னிடம் சரியாக கூட முகம் கொடுத்து பேசவில்லை. இதுவரை அந்த தயாரிப்பாளர் கூறியபடி எனக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. சினிமாவில் நடிகைகள் பல்வேறு அவமானங்களை சந்திக்க நேருகிறது" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராடவுள்ளேன்' - ஸ்ரீரெட்டி அறிவிப்பு ! 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஒரு பக்கம் பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வரும் நிலையில் தென்னிந்திய சினிமாவில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கிய நடிகை ஸ்ரீரெட்டி பொள்ளாச்சி சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

sri reddy

 

இது குறித்து ஸ்ரீரெட்டி பேசும்போது.... "பொள்ளாச்சி சம்பவம் ஏழு வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன். விரைவில் போலீஸ் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்" என்றார்.

 

Next Story

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய அடுத்த நடிகை..! படங்கள் உள்ளே

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
sri reddy

 

சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும், படங்களையும் வெளியிட்டு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 விழாவில் தன்னை பற்றி பேசியபோது சிரித்ததற்கு அவரை சமூகவலைத்தளத்தில் கண்டித்து "கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது" என்று கோபமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகை ஹேமா குறித்தும் தற்போது சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அடுக்கடுக்காக பாலியல் புகார் கூறியிருந்த ஸ்ரீரெட்டியை நடிகை ஹேமா ஏற்கனவே... "ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர், நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்" என்று விமர்சித்திருந்தார். 

 

 

 

 

sri reddy


இந்நிலையில் தற்போது ஹேமா மீது கோபமடைந்த ஸ்ரீரெட்டி...."ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். என்னைப் பற்றி தெரியாமல் நீங்கள் கருத்து சொன்னால், நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எனது அதிரடியை பார்க்க வேண்டி இருக்கும்" என்று சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருப்பது தெலுங்கு பட உலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.