Skip to main content

தன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

கடந்த 2012ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான தமிழ் படம் முகமூடி. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிகையாக நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன்பின் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கிலும், ஹிந்தியிலும் கணிசமாக நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
 

pooja hegde

 

 

தற்போது அவர் அல்லூ அர்ஜூனுடன் இணைந்து நடித்துள்ள அலா வைகுந்தபுரமுலோ படம் செம ஹிட்டாகி வெற்றிகரமாக ஓடுகிறது. பிரபாஸுடன் ஜான் என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த பாஸ்கர் ராவ் என்ற ரசிகர் ஒருவர் பூஜாவை காண்பதற்காக மும்பைக்குச் சென்றுள்ளார். பூஜாவை எப்படியாவது சந்தித்துவிடலாம் என்று நினைத்த பாஸ்கர் ராவ்க்கு அவர் போடும் திட்டங்கள் அனைத்தும் தோல்வியே கிடைக்கிறது. தனக்கு பிடித்த நடிகையை பார்த்துவிட்டுத்தான் சொந்த ஊர் திரும்புவேன் என்று ஒற்றைக்காலில் நின்றுள்ளார். ஐந்து நாட்களாக மும்பையில் தங்கியிருந்ததால் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சாலையோரத்தில் படுத்து உறங்கியுள்ளார்.

இதையடுத்து இந்த விஷயங்களெல்லாம் பத்திரிகைகளில் செய்திகளாக வெளியானது. இதன்பின் இதை அறிந்த நடிகை பூஜா ஹெக்டே பாஸ்கரை நேரில் சந்தித்து, அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டார். அதனுடன் “நீங்கள் மும்பைக்கு வந்ததற்கும் 5 நாட்கள் காத்திருந்து என்னை சந்தித்தற்கும் நன்றி. உங்களுடைய செயலை நினைத்து நெகிழ்ந்தேன். அதே நேரத்தில் என்னுடைய ரசிகர்கள் இதுபோன்ற செயல்களால் சிரமத்திற்குள்ளாவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

எனது ரசிகர்கள் சாலையில் படுத்து உறங்குவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது அன்பை உணர்வேன் என்று சத்தியமிட்டுக் கூறுகிறேன். ரசிகர்களே என்னுடைய பலம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லிங்குசாமியின் 'பையா 2' - மூன்றாவது முறையாக தமிழில் நடிக்கும் விஜய் பட நடிகை

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

paiyaa 2 poja hegde is pair to arya

 

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கி தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டை இப்பட பாடல்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. 

 

லிங்குசாமி 12 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதில் கார்த்திக்கு பதில் ஆர்யா நடிப்பதாகவும் கதாநாயகியாக ஜான்வி கபூரும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. ஆனால் ஜான்வி கபூர் எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் இதுவரை கமிட்டாகவில்லை என அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில் 'பையா 2' படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

 

ஜீவாவின் 'முகமூடி' படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே பின்பு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திய நிலையில் விஜய்யின் 'பீஸ்ட்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் பூஜா ‘பையா 2’ வில் நடிக்கும் பட்சத்தில் அவருக்கு இது மூன்றாவது தமிழ் படமாக அமையும். முதல் இரண்டு படங்கள் தோல்வியைத் தழுவியதால் இப்படம் அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.  

 

 

Next Story

சூர்யாவுடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

pooja hegde joins surya next movie

 

'எதற்கும் துணிந்தவன்' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' படத்தில் நடித்து வருகிறார். கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். பாலா படத்தின் பணிகளை முடித்துவிட்டு சூர்யா வாடிவாசல் படத்தின் பணியில் ஈடுபடவுள்ளார்.

 

இதனிடையே நடிகர் சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா படமாக உருவாக்கவுள்ள இப்படம்  பீரியட் கலந்த ஆக்சன் கதையாக இருக்கும் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை முதலில் ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனம் ராஜா தயாரிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது சில காரணங்களுக்காக யூ.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.